ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

வைக்கோ சுயரூபம்

இதெல்லாம் படிக்கனுங்க அண்ணாச்சி!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
வைகோ வின் சுயரூபத்தை தோலுரிக்கும்
நண்பர் பாலா பரத் - ன் அருமையான பதிவு.
வேஷம் கலைக்கப்பட்டதால் ஆவேசமா..?
புரட்சிப்புயல் அய்யா வை.கோ அவர்களுக்கு வணக்கம்...
தங்களது மக்கள் நலக்கூட்டணி வலுவாக இருக்கிறது என்று கம்யூனிஸ்டு முத்தரசன் கூறியிருக்கிறார்...வாழ்த்துக்கள்...
கடந்த 2011ம் ஆண்டு அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவராக படித்துக் கொண்டிருக்கும் போது ஈழத்தமிழர்கள் பற்றி நான் எழுதிய தேசிய விலங்கு கவிதை தொகுப்புக்கு சிறப்பாக அணிந்துரை எழுதித் தந்தீர்கள்..பின்பு அந்த புத்தகத்தை தங்களது கையினால் தாயகத்தில் வைத்து அறிமுகப்படுத்துவது போன்ற புகைப்படம் எடுத்துக் கொண்டோம்...அப்போது கண் கலங்கியபடி என் கையை பற்றியபடி...
.ஈழம் பற்றி உணர்வுப்பூர்வமாக பகிர்ந்து கொண்டீர்கள்.தங்களது இன உணர்வும் ஈழ உணர்வும் என்னை அப்படியே மெய்சிலிர்க்க வைத்தது..
தற்போது கூட டாஸ்மாக்குக்கு எதிரான கடுமையான போராட்டங்களால் தமிழக அரசை கலகலக்க வைத்தீர்கள்..உங்கள் மீது துப்பாக்கிச்சூடு கூட நடத்தப்பட்டதாக புகார் கூறினீர்கள்..மாணவர்களை வெகுண்டு எழ சொன்னீர்கள்.டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்குங்கள் என்று ஆவேசப்பட்டீர்கள்..நன்று..
ஆனால் தங்களது மகன் சிகரெட் கம்பெனி டீலர் நடத்துகிறாராமே என்ற கேள்வியை செய்தியாளர்கள் கேட்டதற்கு பின்பு தங்களது டாஸ்மாக் போராட்டம் வெறும் புஸ் ஆனது தான் வேதனையிலும் வேதனை...
சரி விஷயத்திற்கு செல்வோம்... ஈழம் பற்றிய தங்களது நிலைப்பாட்டில் ஏதோ திமுக துரோகம் செய்ததாகவும்..திமுகவினர் ஈழ உணர்வு இல்லாதவர்கள் போன்றும் தாங்கள் தேர்தலுக்கு தேர்தல் கூறி வருகிறீர்கள்..அது உண்மையிலே தங்களது மனசாட்சிக்கு உறுத்தவில்லையா..நான் எனது தேசிய விலங்கு புத்தகத்தை கலைஞரிடம் கொடுப்பதற்காக அறிவாலயம் சென்றிருந்தேன்..முதலில் சண்முகநாதன் அவர்கள் என்னிடம் புத்தகத்தை பெற்றுக்கொண்டார்..தலைவரிடம் கொடுப்பதாக சொன்னார்..நானும் கிளம்பலாம் என்று முடிவெடுத்து ஆயத்தமாக அப்போது என்னை நோக்கி ஒருவர் ஒடி வந்தார்..
அவர் துறைமுகம் காஜா "தம்பி நீங்க தான் சட்டக்கல்லூரி மாணவரா..கவிஞரா..என்றபடி தம்பி தலைவர் உங்கள வரச்சொன்னாரு..என்று சொல்ல நான் கலைஞர் அவர்களின் பக்கத்தில் சென்றேன்..
கலைஞர் 'வாயா நீதான் இந்த புத்தகத்தை எழுதிய கவிஞரா..உணர்வுப்பூர்வமா இருந்துச்சியா..என்ன பண்ற..எந்த ஊரு என்று விசாரிக்க நான் சட்டக்கல்லூரி மாணவன்.. ஆண்டிமடம் எம் எல் ஏ சிவசங்கர் அறையில் தங்கி படிக்கிறேன் என்று சொல்ல நல்லா படிய்யா..நிறைய எழுது என்று சொன்னார்..ஈழ உணர்வு இல்லாமலா கலைஞர் அவர்கள் என்னை அழைத்து பேசினார்..
அவரது உணர்வு தான் ஈழப்போராளி தமிழ்செல்வன் இறந்த போது 'அப்படி சிரிப்பாயே தமிழ்செல்வா' என்று ஒரு இரங்கல் கவிதை எழுதியிருந்தார்..அப்போது கலைஞர் முதலமைச்சர்..
காங்கிரஸீடன் கூட்டணி வைத்திருந்தார்..ஆனாலும் அவரது ஈழ உணர்வு அவரை சும்மா இருக்க விடவில்லை..அந்த கவிதைக்காக கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
நீங்கள் விடுதலைப்புலிகளை பற்றி பேசியதற்காக பொடாவில் உங்களை கைது செய்த உங்களது அன்புசகோதரி ஜெயலலிதா..கலைஞரை கைது செய்ய சொல்லி காட்டமானஅறிக்கை வெளியிட்டார்..அதை நீங்கள் உங்கள் வசதிக்காக மறந்து விட்டீர்களா..வை.கோ அவர்களே..
நீங்கள் தற்போது கூட்டணி வைத்திருக்கும் கம்யூனிஸ்ட்கள் தனி ஈழத்திற்கு எதிரானவர்கள் என்பது உங்களுக்கு தெரியாதா..?
உங்களது முரண்பாடு என்பது சகிக்க முடியாமல் தான் உங்களது கட்சியிலிருந்த தலைவர்கள் காணாமல் போய் கொண்டிருக்கிறார்கள்..
திமுககாரன் ஏதோ ஈழ உணர்வு இல்லாதவன் போன்ற பரப்புரையை நிகழ்த்தும் வை.கோ அவர்களே உங்களுக்கு தெரியுமா..ஒரு நாள் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் சிவசங்கரோடு காரில் பயணித்து கொண்டிருந்த போது அவருக்கு ஒரு தொலைபேசி வர..அதை பேசும் போது அவரது குரலில் சுரத்து குறைந்திருந்தது..பேசி முடித்து என்னிடம் திரும்பி 'பாலா பிரபாகரன கொன்னுட்டங்களாம்'என்று சொல்ல அவரது கண் கலங்கியிருந்தது..
பின்பு சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு சென்று என்டிடிவியில் பிரபாகரனின் உடலை பார்த்தவர் சோகத்தோடு வீடு திரும்பிய சிவசங்கர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்..உணர்வு இல்லாமலா உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும்..
இந்த சிவசங்கர் தான் செம்பருத்தி என்ற எட்டாம் வகுப்பு மாணவி தனது ஊருக்கு நூலகம் வேண்டும் என்று கேட்டதற்கு.. நூலகத்திற்கு கட்டிடம் கட்டி தந்து அந்த மாணவியின் கையாலே நூலகத்தை திறந்து வைக்கவும் செய்தவர்...இந்த நிகழ்வு ஊடகங்களில் வந்திருந்தது..இந்த சிவசங்கர் யார் தெரியுமா...?
நீங்கள் கழகத்தை விட்டு ஒடிப்போக முடிவெடுத்து...கூப்பிட்ட போது கழகம் எனது உயிர் என்று உங்களோடு வராது கலைஞரே தனது தலைவர் என்று இப்போதும் தள்ளாத வயதிலும் கழக கூட்டங்களில் பங்கேற்று வரும் எஸ்.சிவசுப்பிரமணியன் அவர்களின் மகன்...
சிவசங்கர் எஸ்.எஸ்
இவர் போன்ற ஆணிவேரை கொண்டு தான் கழகமானது ஆற்றலுடன் களமாடி வருகிறது..
கலிங்கப்பட்டியிலிருந்து நீங்கள் ரஷ்யா...கியூபா..என்று உலக அரசியல் பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது யார் தலைவர் ‪#‎கலைஞர்‬..
இந்திய அரசியலிலே பாராளுமன்றத்தில் உங்களது முகத்தை அடையாளம் காட்டியது யார் தலைவர் கலைஞர் அவர்களும் திமு கழகமும் தான்..
‪#‎பேரறிஞர்அண்ணா‬ ஆரம்பித்து கலைஞர் கட்டிக்காத்த மாபெரும் கழகத்தை அழிப்பதற்காகத்தான் நீங்கள் கட்சி ஆரம்பித்தீர்களா..?
தமிழ்நாட்டு மக்கள் உங்களை ஊதாசினப்படுத்துவதற்கான காரணம் உங்களிடம் வெறும் பேச்சு மட்டுமே இருக்கிறது..நேற்று வந்த விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க தயார் என்கின்றீர்களே உங்களது மநகூவில் நீங்கள் வெறும் செல்லாக்காசு என்பதை நீங்களே ஒத்துக்கொள்கிறீர்கள் என்று தானே அர்த்தம்..
நீங்கள் தற்போது மகான் என்று சொல்கிறீர்களே எங்களது பக்கத்தூரு அங்கனூர் திருமாவளவன்
அவரை வன்னியர் மிகுந்த அரியலூர் பகுதியில் எம்பியாக்கி அழகு பார்த்தவர் எங்களது தலைவர் கலைஞர்..அவரது கட்சியின் உள்கட்டமைப்பையே வலுப்படுத்திக்கொண்டதே நாங்கள் அவரது கட்சிக்கு உள்ளாட்சி தேர்தலில் அளித்த இடங்களே...
தளபதி ஸ்டாலின்... நீங்கள் அதிமுக பினாமி என்று சொன்ன போது ஏன் ஆவேசப்படுகிறீர்கள்..?
பழைய ஈயம் பித்தளைக்கு பேரீச்சம் பழம் என்ற பாணியிலான உங்களது தேர்தல் கால ஈழ வியாபாரத்தை...மேதகு பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் துப்பாக்கி தோட்டாக்களால் உங்களை துளைத்திருப்பார்..
தமிழக மக்களின் பிரச்சினையை பற்றி பேசுவதற்கு துப்பில்லாத வை.கோ அவர்களே.. ஒரு நாள் உங்கள் கழுத்தில் கிடக்கும் கறுப்புத்துண்டும் உங்களை வெறுக்கும்...உங்களது முரண்பாடு கண்டு உங்களது கழுத்தை நெரிக்கும்..நன்றி என்ற வார்த்தையை பழகிடாத தங்களுக்கு பெரும் நன்றி...
உங்களது மநகூக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...இந்திய அரசியலிலே 94 வயதில் போட்டியிடுகின்ற ஒரு முதுபெரும் தலைவரை முதுகில் குத்திய பெருமையை நீங்கள் அடைந்துள்ளீர்கள்..அவர் வெற்றி பெற உழைக்கும் பெரும் பேற்றினை நாங்கள் அடைந்துள்ளோம்...வணக்கம்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நன்றி ..நண்பர் பாலா பரத்

வெள்ளி, 1 ஏப்ரல், 2016

அதிமுகவின் சாதனை (வேதனை)கள்...

அதிமுகவின் சாதனை (வேதனை)கள்...
*.வெற்றி பெற்ற முதல் நாள் உங்கள் அரசு என்ற வார்த்தை மறுநாள் நான், எனது அரசு என்றானதே ..
*.சமச்சீர்கல்வியில் நீதிமன்றம் உங்கள் மூக்கை உடைத்தது.
*.பாட புத்தகங்களை அச்சடித்து 450 கோடியை வீணடித்தது.
*.அண்ணா நூலகத்தை நாசபடுத்தியது .
*.பஸ் கட்டணம் உயர்தியது.
*.பால் விலையை உயர்த்தியது.
*.மின்சார கட்டணத்தை உயர்த்தியது.
*.கடுமையான மின் தட்டுபாடை ஏற்படுத்தியது.
*.ஒரு மின்உற்பத்தி நிலையம் கூட அமைக்காது.
*.தொழில் வளர்ச்சியை முடக்கியது .
*.தொழில் நிறுவணங்கள் தமிழகத்தை விட்டே ஒடியது.
*.சட்டசபையை " பெஞ்ச் தட்டும் சபையாக " மாற்றியது.
*.கரும்பு விவசாயிகளை கதற விட்டது .
*.நெல் விவசாயிகளை நெம்பியெடுத்தது.
*.கிராம, தாலுகா அலுவலங்களில் இலவசமாக வழங்கபட்ட சான்றிதழ்களை பணம் கட்டி பெற வைத்தது.
*.சாலைகளே இல்லா தமிழகத்தை உருவாக்கியது.
*.உலகமே வியக்கும் ஓட்டை உடைசல் பேருந்து '
*.அவதூறு வழக்கில் உச்ச நீதிமன்றம் மண்டையில் கொட்டியது.
*.தானே புயலில் கடலூரை தவிக்க விட்டது.
*.கொடநாட்டில் வாசம்.
*.பெண் புகாரில் சிக்கியவர்களை இடைத்தேர்தலில் நிறுத்தியது.
*.கச்சதீவு மீட்பை கனவாக்கியது.
*.மாற்றுதிறனாளிகளுக்கு மரண பயம் காட்டியது.
*.இலக்கு வைத்து மது விற்றது.
*.தமிழ்நாட்டு போலீஸை டாஸ்மாக் போலீஸாக்கியது.
*.ஊழல் வழக்கில் ஜெயிலுக்கு போனது.
*.நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்தது.
*.மந்திரிகள் மண் சோறு தின்றது.
*.தாது மணலை கொள்ளையடித்தது
*.ஆவின் ஊழல் .
*.கமல்ஹாசனை கலங்கடித்தது.
*.விஜய்யை வியர்க்க வைத்தது .
*.சகாயத்தை சுடுகாட்டில் படுக்க வைத்தது.
*.கனிமவளத்தை களவாடியது.
*.அப்துல் கலாமை அவமதித்தது.
*.ஊழல் ஐ.ஏ. எஸ் அதிகாரிகள் பட்டியல் வெளியானது.
*.25 விதமான ஊழல் பட்டியல் வெளியானது.
*.முட்டை, பருப்பு ஊழல்.
*.மின்சாரத்தில் கமிஷன், மணல் கொள்ளை.
*.லோக் ஆயுத்தாவை அமல்படுத்தாதது .
*.பத்திர பதிவு கட்டணத்தை உயர்த்தியது.
*.நிலங்களின் வழிகாட்டு மதிப்பை தாறுமாறாக உயர்த்தியது .
*.ஜல்லிகட்டை ஜடமாக்கியது.
*.தர்மபுரியில் குழந்தைகள் இறந்தது.
*.திருப்பதியில் தமிழர்கள் மீதான போலி என்கவுன்டர் .
*.பார்வையற்றவர்களை பரிதவிக்க வைத்தது.
*.செவிலியரை சொல்லியடித்தது.
*.உயர் நீதிமன்ற பாதுகாப்பு மத்திய படையிடம் .
*.ஹெலிகாப்டரை கும்பிட வைத்தது.
*.ஆர். கே. நகரில் இமாலய கள்ள ஓட்டு.
*.செம்பர பாக்கத்தம்மா என விருது வாங்கியது.
*.வெள்ள நிவாரணத்தில் ஸ்டிக்கர் ஒட்டியது.
*.கோவனை கைது செய்தது.
*.பேனர் கிழிப்பில் விஜயகாந்திடம் ஜகா வாங்கியது.
*.மிடாஸில் மிதக்கும் தமிழகம்.
*.ஈயம் பூசுபவர்களை முதலீட்டாளர் என்றது.
*.விஷன் 2023 வெளியே வராமலே போனது .....
*.மன்னார்குடி வகையறாக்கள் வாங்கி குவிக்கும் தியேட்டர்கள்
என இந்த சாதனையை தான் ஜெயலலிதா முடித்துவிட்டதாக சட்டசபையில் பெருமை பீத்தியுள்ளார்...
அதிமுகவின் சாதனை (வேதனை)கள்...
*.வெற்றி பெற்ற முதல் நாள் உங்கள் அரசு என்ற வார்த்தை மறுநாள் நான், எனது அரசு என்றானதே ..
*.சமச்சீர்கல்வியில் நீதிமன்றம் உங்கள் மூக்கை உடைத்தது.
*.பாட புத்தகங்களை அச்சடித்து 450 கோடியை வீணடித்தது.
*.அண்ணா நூலகத்தை நாசபடுத்தியது .
*.பஸ் கட்டணம் உயர்தியது.
*.பால் விலையை உயர்த்தியது.
*.மின்சார கட்டணத்தை உயர்த்தியது.
*.கடுமையான மின் தட்டுபாடை ஏற்படுத்தியது.
*.ஒரு மின்உற்பத்தி நிலையம் கூட அமைக்காது.
*.தொழில் வளர்ச்சியை முடக்கியது .
*.தொழில் நிறுவணங்கள் தமிழகத்தை விட்டே ஒடியது.
*.சட்டசபையை " பெஞ்ச் தட்டும் சபையாக " மாற்றியது.
*.கரும்பு விவசாயிகளை கதற விட்டது .
*.நெல் விவசாயிகளை நெம்பியெடுத்தது.
*.கிராம, தாலுகா அலுவலங்களில் இலவசமாக வழங்கபட்ட சான்றிதழ்களை பணம் கட்டி பெற வைத்தது.
*.சாலைகளே இல்லா தமிழகத்தை உருவாக்கியது.
*.உலகமே வியக்கும் ஓட்டை உடைசல் பேருந்து '
*.அவதூறு வழக்கில் உச்ச நீதிமன்றம் மண்டையில் கொட்டியது.
*.தானே புயலில் கடலூரை தவிக்க விட்டது.
*.கொடநாட்டில் வாசம்.
*.பெண் புகாரில் சிக்கியவர்களை இடைத்தேர்தலில் நிறுத்தியது.
*.கச்சதீவு மீட்பை கனவாக்கியது.
*.மாற்றுதிறனாளிகளுக்கு மரண பயம் காட்டியது.
*.இலக்கு வைத்து மது விற்றது.
*.தமிழ்நாட்டு போலீஸை டாஸ்மாக் போலீஸாக்கியது.
*.ஊழல் வழக்கில் ஜெயிலுக்கு போனது.
*.நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்தது.
*.மந்திரிகள் மண் சோறு தின்றது.
*.தாது மணலை கொள்ளையடித்தது
*.ஆவின் ஊழல் .
*.கமல்ஹாசனை கலங்கடித்தது.
*.விஜய்யை வியர்க்க வைத்தது .
*.சகாயத்தை சுடுகாட்டில் படுக்க வைத்தது.
*.கனிமவளத்தை களவாடியது.
*.அப்துல் கலாமை அவமதித்தது.
*.ஊழல் ஐ.ஏ. எஸ் அதிகாரிகள் பட்டியல் வெளியானது.
*.25 விதமான ஊழல் பட்டியல் வெளியானது.
*.முட்டை, பருப்பு ஊழல்.
*.மின்சாரத்தில் கமிஷன், மணல் கொள்ளை.
*.லோக் ஆயுத்தாவை அமல்படுத்தாதது .
*.பத்திர பதிவு கட்டணத்தை உயர்த்தியது.
*.நிலங்களின் வழிகாட்டு மதிப்பை தாறுமாறாக உயர்த்தியது .
*.ஜல்லிகட்டை ஜடமாக்கியது.
*.தர்மபுரியில் குழந்தைகள் இறந்தது.
*.திருப்பதியில் தமிழர்கள் மீதான போலி என்கவுன்டர் .
*.பார்வையற்றவர்களை பரிதவிக்க வைத்தது.
*.செவிலியரை சொல்லியடித்தது.
*.உயர் நீதிமன்ற பாதுகாப்பு மத்திய படையிடம் .
*.ஹெலிகாப்டரை கும்பிட வைத்தது.
*.ஆர். கே. நகரில் இமாலய கள்ள ஓட்டு.
*.செம்பர பாக்கத்தம்மா என விருது வாங்கியது.
*.வெள்ள நிவாரணத்தில் ஸ்டிக்கர் ஒட்டியது.
*.கோவனை கைது செய்தது.
*.பேனர் கிழிப்பில் விஜயகாந்திடம் ஜகா வாங்கியது.
*.மிடாஸில் மிதக்கும் தமிழகம்.
*.ஈயம் பூசுபவர்களை முதலீட்டாளர் என்றது.
*.விஷன் 2023 வெளியே வராமலே போனது .....
*.மன்னார்குடி வகையறாக்கள் வாங்கி குவிக்கும் தியேட்டர்கள்
என இந்த சாதனையை தான் ஜெயலலிதா முடித்துவிட்டதாக சட்டசபையில் பெருமை பீத்தியுள்ளார்...

புதன், 30 மார்ச், 2016

ஜெயலலிதா-சசிகலா & கோ - குவித்த சொத்துக்கள் முழு விபரம்..!

ஜெயலலிதா-சசிகலா & கோ - குவித்த சொத்துக்கள் முழு விபரம்..!
====================================================
1 போயஸ் கார்டன், பிளாட் எண் 50, தேனாம்பேட்டை ரூ.1,32,009
2 ஸ்ரீநகர், ஆபீசர் காலனி, ஐதராபாத், ஆந்திரா ரூ.50,000
3 இரண்டு பார்ம் ஹவுஸ்கள், ரங்காரெட்டி தாலுகா, பஷீராபாத் கிராமம் மற்றும் ஜெட்டிமெட்லா, ஐதராபாத் ரூ.1,65,058.50
4 ஆந்திர மாநிலம், மெகால் தாலுகா, பஷீராபாத் கிராமத்தில் 3.15 ஏக்கர் நிலம் ரூ.13,254.50
5 தமிழகத்தின் செய்யூர் கிராமத்தில் ஜெயலலிதா பெயரில் வேளாண் நிலம் ரூ.17,060
6 சென்னை பட்டம்மாள் சாலையில் ஜெயலலிதா, சசிகலா பெயரில் கட்டிடம் ரூ.5,70,039
7 சென்னை சாந்தோமில் சசிகலா பெயரில் ஆர்.ஆர்.பிளாட்ஸ் ரூ.3,13,530
8 சென்னை அண்ணா சாலையில் சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வாங்கிய கட்டிடம் ரூ.98,904
9 சென்னை நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலையில் 11 கிரவுண்டு நிலம் வாங்கியது. ரூ.22,10,919
10 சென்னை செயின்ட் மேரிஸ் சாலையில் ஜெயலலிதா பெயரில் 1,206 ச.அடி நிலம் ரூ.1,05,409
11 சென்னை மவுன்ட் ரோட்டில் 1,856 சதுர அடி நிலம் ஜெயலலிதா பெயரில் பதிவு ரூ.1,05,409
12 தஞ்சாவூர் மனம்புசாவடியில் 2,400 சதுர அடி நிலம் வாங்கி பதிவு ரூ. 1,57,125
13 தஞ்சாவூர் நகரில் எச்.டி.சாலையில் 51 ஆயிரம் சதுர அடி நிலம் வாங்கி பதிவு ரூ.1,15,315
14 தஞ்சாவூர், எச்.டி. சாலையில் காலி நிலம் வாங்கி பதிவு ரூ.2,02,778
15 திருச்சி பொன்னகரம், அபிஷேகபுரம் கிராமத்தில் 3,525 சதுர அடி நிலம் ரூ.5,85,420
16 தஞ்சாவூர் மாவட்டம், சுந்தரகோட்டையில் 3.23 ஏக்கர் தரிசு நிலம் வாங்கி பதிவு ரூ.75,210
17 சென்னை கிண்டியில் உள்ள திரு.வி.க. தொழிற்பேட்டையில் 5,658 சதுரஅடி நிலம் ரூ.5,28,039
18 சென்னை மயிலாப்பூரில் ஜெயலலிதா பெயரில் 1,407 சதுர அடி நிலம் பதிவு ரூ.10,20,371
19 தஞ்சை மன்னார்குடியில் உள்ள ஹரிதரநதி மேற்கில் 25,035 சதுரஅடி நிலம் வாங்கி சசிகலா பெயரில் பதிவு ரூ.6,78,000
20 சென்னை கிண்டியில் உள்ள திரு.வி.க. தொழிற்பேட்டை புனிததாமஸ் கிராமத்தில் 4,664.60 சதுர அடி நிலம் பதிவு ரூ.15,05,428
21 சென்னை நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலையில் 11 கிரவுண்டு நிலம் வாங்கியது. ரூ.2,98,144
22 ஆந்திர மாநிலம் செகந்திராபாத் ராதிகா நகரில் 222.92 சதுர அடி மற்றும் நிலம் டெல்லி திவான்ஹால் பகிரத்பேலஸ் ரூ.5,57,761
23 சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் டான்சி (பவுண்ட்ரி) நிலம் ரூ.2,13,68,152
24 தமிழக வீட்டுவசதி கழகம் சார்பில் இளவரசிக்கு வீட்டுமனை ஒதுக்கீடு ரூ 2,35,813
25 சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் டான்சி (ஒயர்) நிலம் ரூ.90,17,089
26 சென்னை அபிராமபுரத்தில் நிலம், கட்டிடம் ரூ.49,02,105
27 சென்னை அடுத்த செய்யூர் கிராமத்தில் 11.07 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு ரூ.3,18,712
28 சென்னையில் உள்ள மகாசுப்புலட்சுமி திருமண மண்டபம் சுதாகரன் பெயரில் வாங்கி பதிவு செய்யப்பட்டது ரூ.38,51,000
29 சென்னை நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலையில் ஜம்ஸ்கோர்ட் 1,736 சதுர அடி நிலம் வாங்கியது ரூ.1,60,572
30 சென்னை ஈக்காட்டுதாங்கல் பகுதியில் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்திற்கு சசிகலா, சுதாகரன் பங்கு வாங்கிய தொகை
ரூ.84,21,000
31 வெலகாபுரம் கிராமத்தில் 45.22 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு செய்யப்பட்டது ரூ.40,25,023.70
32 சென்னை அடுத்த நீலாங்கரையில் 4,802 சதுர அடி நிலம் பதிவு ரூ.9,60,520
33 சென்னை தி.நகர் பத்மநாப தெருவில் 5,430 சதுர அடி நிலம் பதிவு ரூ.15,96,150
34 சென்னை அடுத்த சிறுதாவூர் கிராமத்தில் இளவரசி பெயரில் 63.94 ஏக்கர் நிலம் பதிவு ரூ.14,01,600
35 சென்னை அடுத்த செய்யூர் கிராமத்தில் 2.56 ஏக்கர் நிலம் பதிவு ரூ. 1,23,910
36 வடசென்னையில் 10.7 ஏக்கர் நிலம் பதிவு ரூ.4,65,000
37 சென்னை டி.டி.கே. சாலையில் 2,150 சதுர அடி நிலம் வாங்கி பதிவு ரூ.57,00,000
38 சென்னை டிடிகே சாலை ஸ்ரீராம்நகர் மற்றும் ஈஞ்சம்பாக்கத்தில் 1.29 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு ரூ.6,49,770
39 சென்னை சோழிங்கநல்லூரில் நிலம் ரூ.3,75,000
40 சென்னை அடையாறில் கட்டிடம் வீடு ரூ.5,70,200
41 சென்னை பசுல்லா சாலையில் ரூ.9,30,600
42 சென்னை நுங்கம்பாக்கத்தில் 4,348 சதுர அடி நிலம் வாங்கி பதிவு ரூ.11,36,024
43 சென்னை அடுத்த சிறுதாவூரில் 3.30 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு ரூ.93,475
44 சென்னை வெட்டுவாங்கேணியில் 1 ஏக்கர் நிலம் பதிவு ரூ.3,63,120
45 சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் 640 சதுர அடி நிலம் ரூ.2,26,130
46 சென்னை தி.நகர், முருகேஷ் சாலையில் 4,800 சதுர அடி நிலம் ரூ.33,44,040
47 சென்னை அடுத்த சோழிங்கநல்லூரில் 900 சதுர அடி நிலம் ரூ.9,95,670
48 சேரகுளம் மற்றும் வள்ளாகுளம் கிராமத்தில் 53.66 ஏக்கர் நிலம் பதிவு ரூ.1,21,389
49 கருங்குழிபள்ளம் கிராமத்தில் 16.33 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு ரூ.6,89,202
50 திருவேங்கடநகர் காலனியில் 520 சதுர அடி வீடு ரூ.5,75,000
51 வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கத்தில் 37 சென்ட் நிலம் பதிவு ரூ.1,24,540
52 சென்னை டிடிகே சாலையில் 733 ச.அடி நிலம் ரூ.59,28,050
53 சென்னை அடுத்த பையனூர் கிராமத்தில் 22.90 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு ரூ.16,17,688
54 சென்னை அரும்பாக்கத்தில் 3,197 சதுர அடி நிலம் ரூ.8,55,150
55 பரமேஸ்வரி நகரில் 4,564 சதுர அடி நிலம் ரூ.34,20,160
56 சேரகுளம் கிராமத்தில் 144.28 ஏக்கர் நிலம் ரூ.4,52,844
57 மீராகுளம் கிராமத்தில் 42.31 ஏக்கர் நிலம் ரூ.95,740
58 வள்ளாகுளம் கிராமத்தில் 34 ஏக்கர் நிலம் ரூ.78,801
59 சோழிங்கநல்லூர் கிராமத்தில் 50 சென்ட் நிலம் ரூ.2,86,441
60 ஊத்துக்காடு கிராமத்தில் 27.98 ஏக்கர் நிலம் ரூ.4,51,980
61 கலவை கிராமத்தில் 6.98 ஏக்கர் நிலம் ரூ.25,833
62 வள்ளாகுளம் கிராமத்தில் 286 ஏக்கர் நிலம் ரூ.6,57,169
63 சேரகுளம் கிராமத்தில் 122 ஏக்கர் நிலம் பதிவு ரூ.4,64,997
64 மீராகுளம் கிராமத்தில் 326.15 ஏக்கர் நிலம் ரூ.5,61,935
65 சென்னை அபிபுல்லா சாலையில் 4,293 சதுர அடி கட்டிடம் ரூ.43,56,142
66 சென்னை அபிபுல்லா சாலையில் 3,472 சதுர அடி கட்டிடம் ரூ.59,96,346
67 சென்னை அடுத்த ஊத்துக்கோட்டையில் 106.69 ஏக்கர் நிலம் பதிவு ரூ.7,47,698
68 வண்டம்பள்ளியில் 27.57 ஏக்கர் நிலம் பதிவு ரூ.7,88,076
69 வண்டம்பள்ளியில் ராமராஜ் ஆக்ரோ மில் நிறுவனம் கட்டப்பட்டதின் செலவு ரூ.14,00,806
70 ராம்ராஜ் ஆக்ரோ மில்ஸ் கட்டுமான பணி ரூ.57,19,800
71 ராம்ராஜ் ஆக்ரோ நிறுவன எம்.டி. பங்களா மதிப்பு ரூ.83,41,000
72 சென்னை லஸ் அவென்யூவில் 6,798 சதுர அடி கட்டிடம் ரூ.65,23,176
73 ராம்ராஜ் ஆக்ரோ நிறுவன பங்கு வாங்கியது ரூ.18,42,000
74 சென்னை அபிராமபுரத்தில் கட்டிடம் எழுப்பியதற்கு செலவிட்ட தொகை ரூ.76,00,000
75 கோடநாடு தேயிலை தோட்டம் வாங்கியது ரூ.7,60,00,000
76 நீலாங்கரையில் 11 சென்ட் நிலம் பதிவு ரூ.7,98,945
77 நீலாங்கரையில் 13 சென்ட் நிலம் பதிவு ரூ.9,49,995
78 அரும்பாக்கம் கிராமத்தில் 3,197 சதுர அடி நிலம் ரூ.8,55,150
79 தஞ்சாவூர் வ.உ.சி. நகரில் 26,540 சதுர அடி கட்டிடம் வாங்கியது ரூ.19,03,088
80 ஊத்துக்கோட்டையில் 21.82 ஏக்கர் நிலம் ரூ.3,13,553
81 வெலகாபுரம் கிராமத்தில் 41.10 ஏக்கர் ரூ.80,394
82 பையனூர் கிராமத்தில் 4.27 ஏக்கர் நிலம் ரூ.10,56,880
83 கடலூரில் உள்ள இண்டி-தோஹா கெமிக்கல் நிறுவன கட்டுமான பணிக்கு ரூ.86,91,000
84 நீலாங்கரையில் உள்ள நிலத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.80,75,000
85 நீலாங்கரையில் சசிகலா பெயரில் 11,197 சதுர அடி நிலம் வாங்கப்பட்டது ரூ.5,72,910
86 பையனூரில் வாங்கிய பங்களா புதுப்பிக்க செலவு செய்தது ரூ.1,25,90,261
87 ஈக்காட்டுதாங்கலில் கட்டிடம் ரூ.2,13,63,457
88 வெட்டுவாங்கேணியில் உள்ள கட்டிட புதுப்பிப்பு பணிக்கு ரூ.1,52,59,076
89 ஐதராபாத்தில் உள்ள திராட்சை தோட்ட பண்ணை வீட்டில் புதிய கட்டிடம் எழுப்ப ரூ.6,40,33,901
90 சிறுதாவூர் பங்களா புதுப்பிக்கும் பணிக்கு ரூ.5,40,52,298
91 சென்னை போயஸ் கார்டன் வீடு புதுப்பிக்க ரூ.7,24,98,000
92 சென்னை ஸ்ரீராம்நகரில் உள்ள நிலத்தில் புதிய கட்டிடம் கட்ட ரூ.29,59,000
93 சோழிங்கநல்லூரில் உள்ள கட்டிடம் புதுப்பிக்க ரூ.80,36,868
94 சென்னை பட்டம்மாள் சாலையில் உள்ள கட்டிடம் அருகில் புதிய கட்டிடம் கட்டியதற்கு ரூ.8,00,000
95 சென்னை தி.நகர், பத்மநாப சாலையில் உள்ள நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கு ரூ.20,43,000
96 சென்னை அண்ணாநகரில் உள்ள நிலத்தில் புதிய கட்டிடம் அமைக்க ரூ.24,83,759
97 சென்னை தி.நகர் முருகேசன் சாலையில் உள்ள நிலத்தில் புதிய கட்டிடம் ரூ.10,92,828
98 சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் புதிய கட்டிடம் கட்ட ரூ.53,11,000
99 சென்னை அக்கரையில் புதிய கட்டிடம் அமைக்க ரூ.20,38,959
100 சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் புதிய கட்டிடம் எழுப்ப ரூ.39,34,000
101 சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் புதிய கட்டிடம் எழுப்ப ரூ.14,17,538
102 சேரகுளம் கிராமத்தில் உள்ள ரிவர்வே அக்ரோ பார்ம் கம்பெனி கட்டிடம், மின் இணைப்பு உள்பட கட்டுமான பணிக்கு
ரூ.7,58,160.50
103 சென்னை அபிராமபுரம், இந்தியன் வங்கியில் இளவரசி, விவேக் பெயரில் உள்ள வங்கி கணக்கில் 30.4.1996 அன்று பேலன்ஸ்
தொகை ரூ.2,42,211.50
104 இளவரசி இயக்குனராக இருக்கும் சிக்னோரா பிஸ்னஸ் கம்பெனியின் வங்கி கணக்கில் பேலன்ஸ் 30.4.1996 ரூ.167.20
105 சசிகலா இயக்குனராகவுள்ள பிரஸ் மஸ்ரூம்ஸ் வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.771.26
106 இளவரசி இயக்குனராக உள்ள லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் கம்பெனி வங்கி பேலன்ஸ் 30.4.1996 அன்று ரூ.85,342.25
107 வி.என்.சுதாகரன் வங்கி பேலன்ஸ் 30.4.1996 அன்று ரூ.1,32,221
108 ஜெயலலிதா வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.19,29,561.58
109 இளவரசி வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.3.40,527.95
110 சென்னை மயிலாப்பூரில் உள்ள வங்கியில் ஜெயலலிதா பேலன்ஸ் ரூ.1,70,570.13
111 சசிகலா இயக்குனராக உள்ள மெடல் கிங் கம்பெனி வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.2,900.28
112 சசிகலா பெயரில் சென்னை மயிலாப்பூரில் உள்ள வங்கியில் பேலன்ஸ் 30.4.1996 ரூ.1,889.28
113 மயிலாப்பூர் கனரா வங்கியில் ஜெயலலிதா, சசிகலா வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.20,79,885.12
114 சென்னை மயிலாப்பூர் கனரா வங்கியில் சசிகலா கணக்கு பேலன்ஸ் 30.4.1996 ரூ.1,095.60
115 சசிகலா இயக்குனராக உள்ள மெடல்கிங் கம்பெனிக்கு கிண்டி கனரா வங்கியில் பேலன்ஸ் 30.4.1996 ரூ.3,17,242.21
116 சென்னை மயிலாப்பூர் கனரா வங்கியில் சுதாகரன் வங்கி பேலன்ஸ் 30.4.1996. ரூ.47,453.64
117 சென்னை அண்ணாநகர் சுப்பு லட்சுமி திருமண மண்டபம் வங்கி பேலன்ஸ் ரூ.3,17,457.64
118 சென்னை மயிலாப்பூர் கனரா வங்கியில் சுதாகரன் வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.61,430
119 ஜெயா பைனான்ஸ் வங்கி பேலன்ஸ் ரூ.1,760
120 மயிலாப்பூர் கனரா வங்கியில் இளவரசி வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.1,18,198
121 மயிலாப்பூர் கனரா வங்கியில் இளவரசி வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.894.00
122 மயிலாப்பூர் கனரா வங்கியில் சசிகலா வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.560.55
123 மயிலாப்பூர் கனரா வங்கியில் சசிகலா, இளவரசி ஆகியோர் இயக்குனராக உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் வங்கி பேலன்ஸ்
30.4.1996 ரூ.10,75,335.64
124 மயிலாப்பூர் கனரா வங்கியில் ஜெயலலிதா சசிகலா ஆகியோர் இயக்குனராக உள்ள சசி என்டர்பிரைசஸ் வங்கி பேலன்ஸ் 30.4.1996
ரூ.4,59,976.22
125 ஜெ ரியல் எஸ்டேட் கம்பெனிக்கு அபிராமபுரத்தில் உள்ள இந்தியன் வங்கியில் உள்ள பேலன்ஸ் 30.4.1906 ரூ.167.55
126 சூப்பர்-டூப்பர் டி.வி கம்பெனி இயக்குனராக உள்ள சசிகலா, சுதாகரன் இந்தியன் வங்கி கணக்கில் பேலன்ஸ் 30.4.1996
ரூ.5,46,577.50
127 ஜெ.ஜெ. லீசிங் கம்பெனி வங்கி கணக்கு பேலன்ஸ் 30.4.1996 ரூ.1,838.00
128 ஜெ.எஸ்.ஹவுசிங் வங்கி கணக்கு பேலன்ஸ் 30.4.1996 ரூ.13,671.80
129 கிரீன் பார்ம் ஹவுஸ் வங்கி பேலன்ஸ் ரூ.146.70
130 ஜெயா கான்ட்ராக்டர் அண்டு பில்டர்ஸ் வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.10,891
131 சசி என்டர்பிரைசசின் அபிராமபுரம் இந்தியன் வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.1,02,490
132 சக்தி கன்ட்ரக்ஷன் கம்பெனியின் இந்தியன் வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.1,02,490
133 கோபால் புரமோட்டர்ஸ் வங்கி பேலன்ஸ் ரூ.1,02,490.10
134 லட்சுமி கன்ட்ரக்ஷன் வங்கி பேலன்ஸ் ரூ.1,02,490.18
135 மெடோ அக்ரோ பார்ம் வங்கி பேலன்ஸ் ரூ.358.70
136 ரிவர்வே அக்ரோ பார்ம் வங்கி பேலன்ஸ் ரூ.2,916.61
137 அண்ணாநகர் பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் ஜெயலலிதா வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.2,05,151.06
138 ஜெயலலிதா பேரில் செகந்திராபாத் வங்கியில் பேலன்ஸ் ரூ.3,84,760.67
139 சசிகலா பெயரில் செகந்திராபாத் வங்கியில் பேலன்ஸ் ரூ.2,43,000
140 ஜெயலலிதாவுக்கு சொந்தமான டாடா சீரா கார் மதிப்பு ரூ.4,01,131
141 ஜெயலலிதாவுக்கு சொந்தமான மாருதி-800 கார் மதிப்பு ரூ.60,435
142 ஜெயலலிதாவுக்கு சொந்தமான மாருதி ஜிஸ்பி கார் மதிப்பு ரூ.2,03,424.54
143 ஜெயலலிதாவுக்கு சொந்தமான டிரக்ஸ் ரூ.1,04,000
144 ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான டாடா எஸ்டேட் கார் மதிப்பு ரூ.4,06,106
145 ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஸ்சுவராஜ் மஸ்தா வாகனம் மதிப்பு ரூ.1,76,172.60
146 ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்சுவராஜ் மஸ்தா வேன் மதிப்பு ரூ.3,85,520
147 ஜெயலலிதாவுக்கு சொந்தமான கண்டசா கார் மதிப்பு ரூ.2,56,238
148 ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான டாடா மொபைல் வேன் ரூ.2,81,169
149 ஜெயலலிதா பெயரில் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்திற்கு வாங்கப்பட்ட டிரக்ஸ் ஜீப் ரூ.1,04,000
150 சசிகலாவுக்கு சொந்தமான டாடா சீரா கார் ரூ.3,80,376
151 சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்காக ஜெயலலிதா பெயரில் வாங்கியுள்ள ஸ்சுவராஜ் மஸ்தா வேன் மதிப்பு ரூ.2,99,845
152 சசிகலா பெயரில் வாங்கியுள்ள டாடா சீரா கார் மதிப்பு ரூ.5,11,118
153 சசிகலா பெயரில் வாங்கியுள்ள டாடா சீரா கார் மதிப்பு ரூ.5,11,118
154 சசி என்டர்பிரைசஸ் பெயரில் வாங்கியுள்ள டாடா சுமோ கார் மதிப்பு ரூ.3,15,537
155 சசி என்டர்பிரைசஸ் பெயரில் வாங்கியுள்ள மாருதி எஸ்டிம் கார் மதிப்பு ரூ.5,25,132
156 வி.என்.சுதாகரன் பெயரில் வாங்கியுள்ள கார்கோ வாகனம் ரூ.5,05,009
157 வி.என்.சுதாகரன் பெயரில் வாங்கியுள்ள டிரக்ஸ் ஜீப் மதிப்பு ரூ.2,96,191.28
158 நமது எம்.ஜி.ஆர். பெயரில் வாங்கியுள்ள பஜாஜ் டெலிவரி வேன் மதிப்பு ரூ.52,271
159 ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் பெயரில் வாங்கியுள்ள ஸ்சுவராஜ் மஸ்தா வேன் மதிப்பு ரூ.5,56,999.99
160 ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் பெயரில் வாங்கியுள்ள ஸ்சுவராஜ் மஸ்தா வேன் மதிப்பு ரூ.5,56,999.99
161 மெட்டல்கிங் நிறுவனம் பெயரில் வாங்கியுள்ள மாருதி கார் ரூ.2,22,485.19
162 அதிமுக தலைமை கழகம் பெயரில் வாங்கியுள்ள பஜாஜ் டெம்போ ஆம்னி பஸ் மதிப்பு ரூ.2,03,979
163 ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் பெயரில் வாங்கியுள்ள ஸ்சுவராஜ் மஸ்தா வேன் மதிப்பு ரூ.5,56,999.99
164 ஜெயா பப்ளிகேஷன் நிறுவன பெயரில் வாங்கியுள்ள மெர்சிடெஸ் பென்ஸ் கார் மதிப்பு ரூ.9,15,000
165 அதிமுக தலைமை கழகம் பெயரில் வாங்கியுள்ள பஜாஜ் டெம்போ வேன் மதிப்பு ரூ.2,03,979
166 ஜெயலலிதா பெயரில் கனரா வங்கியில் செய்துள்ள எப்.டி. தொகை ரூ.16,03,545
167 ஜெயா பப்ளிகேஷன் பெயரில் எப்.டி. தொகை ரூ.1,49,544
168 ஜெயா பப்ளிகேஷன் பெயரில் எப்.டி தொகை ரூ.5,00.000
169 சூப்பர்-டூப்பர் டிவி பெயரில் அபிராமபுரம் இந்தியன் வங்கியில் எப்.டி. தொகை ரூ.5,00.000
170 சூப்பர்-டூப்பர் டிவி பெயரில் அபிராமபுரம் இந்தியன் வங்கியில் எப்.டி. தொகை ரூ.5,00.000
171 சூப்பர்-டூப்பர் டிவி பெயரில் அபிராமபுரம் இந்தியன் வங்கியில் எப்.டி. தொகை ரூ.5,00.000
172 கோத்தரி ஓரியண்டல் பைனான்சில் ஜெயலலிதா பெயரில் எப்.டி. தொகை ரூ.1,00,000
173 அதே தொகை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது ரூ.1,00,000
174 அதே தொகை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது ரூ.1,00,000
175 ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை ரூ.3,00,000
176 ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை ரூ.30,00,000
177 ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை ரூ.15,00,000
178 ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை 29.1.98 ரூ.5,00,000
179 ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை 22.4.1998 ரூ.15,00,000
180 ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை 22.4.1998 ரூ.10,00,000
181 ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை 19,10.1993 ரூ.2,00,000
182 மெட்ராஸ் ஆக்சிஜன் கம்பெனி உள்ளிட்ட நிறுவனங்களில ஜெயலலிதா எப்.டி. தொகை ரூ.1,00,00,000
183 ஜெயலலிதாவுக்கு சொந்தமான 389 காலணிகளின் மதிப்பு ரூ.2,00,902.45
184 ஜெயலலிதாவுக்கு சொந்தமான 914 பட்டு சேலைகளின் மதிப்பு ரூ.61,13,700
185 ஜெயலலிதாவுக்கு சொந்தமான 6,195 பிற சேலைகள் மதிப்பு ரூ.27,08,720
186 ஜெயலலிதாவுக்கு சொந்தமான 2,140 பழைய சேலைகளின் மதிப்பு ரூ.4,21,870
187 ஜெயலலிதாவுக்கு சொந்தமான 7 ரிஸ்ட் வாட்ச்கள் மதிப்பு ரூ.9,03,000
188 ஜெயலலிதாவுக்கு சொந்தமான 91 ரிஸ்ட் வாட்ச்கள் மதிப்பு ரூ.6,87,350
189 ஜெயலலிதாவுக்கு சொந்தமான 86 தங்க ஆபரணங்களின் மதிப்பு ரூ.17,50,031
190 சசிகலாவுக்கு சொந்தமான 62 தங்க ஆபரணங்களின் மதிப்பு ரூ.9,38,460
191 ஜெயலலிதாவுக்கு சொந்தமான 26 தங்க ஆபரணங்களின் மதிப்பு ரூ.19,30,852.10
192 சசிகலாவுக்கு சொந்தமான 34 தங்க ஆபரணங்களின் மதிப்பு ரூ.17,54,868.90
193 ஜெயலலிதாவுக்கு சொந்தமான 41 தங்க ஆபரணங்களின் மதிப்பு ரூ.23,90,058.25
194 ஜெயலலிதாவுக்கு சொந்தமான 228 தங்க ஆபரணங்களின் மதிப்பு ரூ.1,40,75,958
195 ஜெயலலிதாவுக்கு சொந்தமான 394 தங்க ஆபரணங்களின் மதிப்பு ரூ.3,12,67,725
196 ஜெயலலிதாவுக்கு சொந்தமான 1,116 கிலோ வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ,48,80,000
197 சூப்பர்-டூப்பர் டி.வி. நிறுவனத்தின் எலக்ட்ரானிக் காம்ப்ளக்ஸ் மதிப்பு ரூ.15,75,800
198 மெட்டல்கிங் நிறுவனத்தின் இயந்திர மதிப்பு ரூ.7,69,000
199 ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் இயந்திரம் கொள்முதல் செய்தது ரூ.2,16,42,000
200 வி.என்.சுதாகரன், சத்யலட்சுமி நிச்சயதார்த்தத்தின்போது ஜெயலலிதா சார்பில் ரூ.2,95,061.50 மதிப்புள்ள தங்கம் , ரூ.8,99,320.50 மதிப்புள்ள வைர நகைகள் பரிசாக வழங்கப்பட்டது அதன் மொத்த மதிப்பு ரூ.11,94,381.50
201 சென்னை தி.நகர் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 30.4.1996 அன்று ஜெயலலிதாவின் பேலன்ஸ் தொகை ரூ.21,380
202 ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் வளர்ச்சிக்கு செலவிட்ட தொகை ரூ.8,60,950
203 சென்னையில் உள்ள ஆர்பிஐயில் ஜெயலலிதா பெயரில் எப்.டி. தொகை ரூ.1,00,00,000
204 ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்காக வாங்கிய புதிய வாகனம் ரூ.32,40,278
205 சசிகலா பெயரில் 30.4.1996ல் சென்ட்ரல் வங்கியில் பேலன்ஸ் ரூ.17,502.98
206 திருச்சியில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான பொன்நகர் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டதற்கான செலவு ரூ.6,83,235
207 சென்னை வேலி கார்ட்ன் சாலையில் உள்ள கட்டிடம் புதுப்பிக்க ரூ.34,46,032
208 செகந்திராபாத்தில் உள்ள கட்டிடம் புதுப்பிக்க ஏற்பட்ட செலவு ரூ.3,00,000
209 30.4.1996 அன்று நமது எம்.ஜி.ஆர். நிறுவன வங்கி பேலன்ஸ் தொகை ரூ.5,10,968.16
210 சேரகுளம் கிராமத்தில் வசித்த நாச்சியம்மாளிடம் வாங்கிய நிலம் ரூ.21,830
211 1993 அக்டோபர் மாதம் இளவரசி, மாஸ்டர் விவேக், கிருஷ்ண பிரியா ஆகியோர் பெயரில் இந்தியன் வங்கியின் ஜெயராமன் மூலம் கொடுத்து டெபாசிட் செய்யப்பட்டதின் மதிப்பு ரூ.38,421.00 - மொத்தம் ரூ.66,44,73,573.27.
அடேங்கப்பா.,
எனக்கென யாரும் இல்லை'னு சொல்லி விட்டு இத்தனை சொத்துக்களையும் யாருக்கு சேர்த்து வச்சாங்களாம்..!!
பகிருங்கள்..

செவ்வாய், 24 நவம்பர், 2015

காந்தியடிகள் பற்றி சிறு சிறு குறிப்புகள்

1. காந்தியின் முழுமையான பெயர் என்ன?
➯ மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி
2. காந்தியடிகளின் தந்தை பெயர் என்ன?
➯ கரம் சந்த் காந்தி
3. காந்தியடிகளின் தாயார் பெயர் என்ன? 
➯ புத்திலிபாய்
4. காந்தியடிகள் எப்போது பிறந்தார்?
➯ 02-10-1869
5. காந்தியடிகளின் எத்தனையாவது பிறந்தநாளை 02-10-2015 அன்று நாம் கொண்டாடுகிறோம்?
➯ 146 வது பிறந்தநாள்
6. காந்தியடிகள் எங்கு பிறந்தார்?
➯ குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தர்
7. காந்தியடிகளுக்கு உண்மையின் மீது பிடிப்பு ஏற்படுத்திய நாடகம் எது?
➯ அரிச்சந்திரன் நாடகம்
8. காந்தியடிகள் எங்கு தனது பள்ளிக்கல்வியை முடித்தார்?
➯ சமல்தாஸ் கல்லூரியில் மெட்ரிகுலேசன் முடித்தார்
9. காந்தியடிகள் எப்பொழுது திருமணம் செய்துகொண்டார்?
➯ மே 1883
10. காந்தியடிகளுக்கு திருமணம் நடந்தபோது அவருக்கு வயது என்ன?
➯ 13க்கும் 14க்கும் இடையில்
11. காந்தியடிகளின் துணைவியார் பெயர் என்ன?
➯ கஸ்தூரிபாய்
12. காந்தியடிகள் லண்டன் செல்லும் முன்பு தனது தாயாருக்கு செய்து கொடுத்த மூன்று சத்தியங்கள் என்னென்ன?
➯ மது, மாது, மாமிசம் தவிர்ப்பேன்
13. காந்தியடிகள் பாரிஸ்டர் பட்டம் பெற லண்டனுக்கு எந்த ஆண்டு சென்றார்?
➯ 1888
14. காந்தியடிகள் தன்னுடைய எத்தனையாவது வயதில் தென்னாப்பிரிக்கா சென்றார்?
➯ 24ம் வயதில்
15. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
➯ 21 ஆண்டுகள் (1893-1914)
16. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எத்தகைய கொடுமைக்கு ஆளானார்?
➯ நிறவெறி கொடுமைக்கு
17. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எந்த இடத்தில் இரயிலில் பயணம் செய்யும் போது அவமதிக்கப்பட்டு இரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டார்?
➯ பீட்டா்மெரிட்ஸ்பர்க்
18. காந்தியடிகள் எப்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்?
➯ 09-01-1915
19. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய நாளை நாம் எவ்வாறு கொண்டாடுகிறோம்?
➯ வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (09-01-1915)
20. காந்தியடிகளின் இந்திய அரசியல் குரு யார்?
➯ கோபால கிருட்டின கோகலே
21. காந்தியடிகள் இந்திய விடுதலை போராட்டத்தில் எத்தகைய கொள்கையை பின்பற்றினார்?
➯ மிதவாதகொள்கை
22. காந்தியடிகள் எந்த விடுதலைப்போராட்ட கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்?
➯ இந்திய தேசிய காங்கிரஸ்
23. காந்தியடிகள் 1917ல் மேற்கொண்ட முதல் சத்தியாக்கிரக போராட்டத்தின் பெயர் என்ன?
➯ சாம்பரான் சத்தியாகிரகம் (பீகாரில் தொடங்கப்பட்டது)
24. காந்தியடிகளின் 1918ல் குஜராத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பெயர் என்ன?
➯ கேதா ஆர்ப்பாட்டம்
25. காந்தியடிகள் 1918ல் அகமதாபாத்தில் நடத்திய போராட்டம் எது?
➯ அகமதாபாத் மில் வேலை நிறுத்தப் போராட்டம்
26. காந்தியடிகள்1919ல் நடத்திய அகில இந்திய போராட்டம் எது?
➯ ரௌலட் சட்டத்திற்கு எதிரானது சத்தியாகிரகப் போராட்டம்
27. காந்தியடிகள் 1920ல் நடத்திய போராட்டம் எது?
➯ ஒத்துழையாமை இயக்கம்
28. காந்தியடிகள் 1930ல் நடத்திய போராட்டம் எது?
➯ சட்டமறுப்பு இயக்கம்
29. காந்தியடிகள் 1942ல் நடத்திய போராட்டம் எது?
➯ வெள்ளையனே வெளியேறு இயக்கம்
30. காந்தியடிகளுக்கு 1920ல் தென்னாப்பிரிக்காவில் வழங்கப்பட்ட கெய்சர் ஜ ஹிந்த் என்ற பட்டத்தை எந்த போராட்டத்தின் போது துறந்தார்?
➯ ஒத்துழையாமை இயக்கம்
31. காந்தியடிகள் 12 மார்ச் 1930ல் என்ன போராட்டத்தை மேற்கொண்டார்?
➯ உப்புசத்தியாகிரகம்
32. காந்தியடிகள் மேற்கொண்ட உப்புச்சத்தியாகிரகம் எங்கு தொடங்கப்பட்டது?
➯ அகமதாபாத்தில் தொடங்கி தண்டியில் முடிவடைந்தது
33. காந்தியடிகள் மேற்கொண்ட உப்புச்சத்தியாகிரகம் (தண்டி யாத்திரை) எவ்வளவு நாள் நடந்தது?
➯ 12-03-1930 முதல் 06-04-1930 வரை தூரம் 388 கிலோமீட்டர்
34. காந்தியடிகள் மேற்கொண்ட தண்டியாத்திரையை அவர் எவ்வாறு பயணம் செய்தார்?
➯ 388 கிலோ மீட்டரும் பாதயாத்திரையாக
35. காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு (1942) இயக்கத்தின் போது எவ்வாறு முழங்கினார்?
➯ செய் அல்லது செத்துமடி (do or die)
36. காந்தியடிகள் சுதந்திரத்திற்காக மட்டுமல்லாது வேறு எதற்காக போராடினார்?
➯ குழந்தைகள் திருமணம், திண்டாமை ஒழிப்பு, விதவைகளுக்கு எதிரான கொடுமைகள்
37. காந்தியடிகள் தாழ்த்தப்பட்ட மக்களை எவ்வாறு அழைத்தார்?
➯ ஹரிஜன் (கடவுளின் குழந்தைகள்)
38. காந்தியடிகள் நாதுராம் கோட்சே என்று சுட்டுக் கொன்றார்?
➯ 30-01-1948
39. காந்தியடிகள் இறந்ததினத்தை இந்தியாவில் எவ்வாறு கொண்டாடுகிறோம்?
➯ தியாகிகள் தினம்
40. காந்தியடிகள் இறந்த தினத்தை ஐ.நா.சபை எவ்வாறு அறிவித்துள்ளது?
➯ சர்வதேச அகிம்சை தினமாக (International day of Non–violence )
41. காந்தியடிகள் தன்சுயசரிதையை எந்த இதழில் எழுதினார்?
➯ நவஜீவன்
42. காந்தியடிகள் தன் சுயசரிதையை எந்த மொழியில் எழுதினார்?
➯ குஜராத்தி மொழியில்
43. காந்தியடிகள் தன் சுயசரிதையை என்ன பெயரில் எழுதினார்?
➯ சத்தியசோதனை
44. காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தவர் யார்?
➯ மன்மோகன் தேசாய்
45. காந்தியடிகளின் வரலாற்றை குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்ட பின்னர் அந்த நூலுக்கு வைக்கப்பட்ட பெயர் என்ன?
➯ My Experiments with Truth.
46. காந்தியடிகள் இந்தியாவில் நடத்திய ஆங்கில இதழ் எது?
➯ யங் இந்தியா
47. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் நடத்திய ஆங்கில இதழில் பெயர் என்ன?
➯ இந்தியன் ஒப்பீனியன்
48. காந்தியடிகளை முதன்முதலில் “ மகாத்மா ” என்று அழைத்தவர் யார்?
➯ இரவீந்திரநாத் தாகூர்
49. காந்தியடிகளை முதன்முதலில் “தேசப்பிதா ” என்று அழைத்தவர் யார்?
➯ நேதாஜி சுபாசு சந்திரபோஸ்
50. காந்திஜீ யை தமிழில் காந்தியடிகள் என்று எழுதும் வழக்கத்தை முதன்முதலில் ஏற்படுத்தியவர் யார்?
➯ திரு.வி.க
51. காந்தியடிகள் தன் வாழ்நாளில் மொத்தம் எவ்வளவு நாட்கள் சிறையில் கழித்தார்?
➯ 2338 நாட்கள்
52. காந்தியடிகள் அதிக நாட்கள் இருந்த சிறை எது?
➯ எரவாடா சிறை (பூனா)
53. காந்தியடிகள் மரணமடைந்த போது அவருக்கு வயது என்ன?
➯ 78 வயது
54. தில்லி செங்கோட்டை அரியணையோடு மீண்டும் தொடர்பு படுத்தப்படும் பெயர்
➯ காந்தி
55. காந்திஜியின் மனைவி பெயர் என்ன?
➯ கஸ்தூரிபாய்
56. காந்திஜிக்கும் கஸ்தூரிபாவிற்கும் பிறந்த மகன்கள் யார் யார்?
➯ ஹரிலால், மணிலால், ராமதாஸ், தேவதாஸ்
57. எந்த அரியணைக் கனவோடும் வளர்க்கப்படாதவர்கள் யார்?
➯ காந்திஜியின் பிள்ளைகள்
58. தென் ஆப்பிரிக்காவில் காந்தி நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட காந்திஜியின் மகன் யார்?
➯ ஹரிலால்
59. தென் ஆப்பிரிக்காவில் கைகளில் விலங்குபூட்டி தெருக்களில் கைதியாக அடித்து இழுத்துச் செல்லப்பட்டவர் யார்?
➯ ஹரிலால்
60. தன் புதல்வர்களையும், தன் பேரப்பிள்ளைகளையும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்தியவர் யார்?
➯ காந்திஜி
61. 388 மைல்கள் நடந்த தண்டி யாத்திரையில் தன் பேரப்பிள்ளையான சிறுவனை (ஹரிலால் மகன்) நடக்க வைத்து அழைத்துச் சென்றவர்?
➯ காந்திஜி
62. தனது உண்ணாவிரதப் போராட்டத்தில் தன் குடும்பத்தை ஈடுபடுத்தியவர் யார்?
➯ காந்திஜி
63. தன் பிள்ளைகள் என்பதற்காக ஒரு சிறு பலன் கூட அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது என்ற உறுதியாக இருந்தவர் யார்?
➯ காந்திஜி
64. லண்டனில் ஹரிலாலைப் படிக்க வைக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தும் அவரை அனுப்ப மறுத்தவர்
➯ காந்திஜி
65. தான் சிறையில் இருந்தபோது சந்தையில் முள்ளங்கி வியாபாரம் செய்து ஆசிரமவாசிகளுக்கு உணவுதர வேண்டிய பொறுப்பை மகன் மணிலாலிடம் ஒப்படைத்தவர்
➯ காந்திஜி
66. மிகுந்த வறுமையில் வாடிய காந்திஜியின் மகன்
➯ ஹரிலால்
67. மணிலாலை தன்னுடைய மகன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளாமலே ஒரு வருடத்துக்கு நீ உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்று சென்னைக்கு தன் மகனை அனுப்பியவர்
➯ காந்திஜி
68. சென்னையில் மூட்டைகள் தூக்கியும் நடைபாதையில் படுத்தும் உறங்கிய காந்திஜியின் மகன்
➯ மணிலால்
69. காந்திஜியைவிட அதிக ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டவர்
➯ மணிலால்
70. உப்பு சத்தியாக்கிரகத்தில் தலையில் எலும்புமுறிவு தாக்குதலுக்கு ஆளான காந்தியின் மகன்
➯ மணிலால்
71. மண்டை உடைக்கப்பட்டு மூளையில் காயத்துடன் சுயநினைவின்றி சிறைக் கைதியாக வாழ்நதவர்
➯ மணிலால்
72. 25 முறை மொத்தம் சுமார் 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர்
➯ மணிலால்
73. தெருப்பிச்சைக்காரனாக இருந்த காந்தியின் மகன்
➯ ஹரிலால்
74. காந்திஜியின் மனைவி கஸ்தூரிபாயின் இறுதி வாழ்க்கை நடந்த இடம்
➯ சிறைச்சாலை
75. காந்திஜியின் மனைவி கஸ்தூரிபாயின் இறுதிச் சடங்குகள் நடந்த இடம்
➯ சிறைச் சாலை வளாகம்
76. 6 முறை - சுமார் 2 ஆண்டுகள் சிறைக் கைதியாக வாழ்ந்தவர்
➯ கஸ்தூரிபாய்
77. தமது 69வது வயதில் இருண்ட அறையில் தனிமைச் சிறையில் இருந்தவர்.
➯ கஸ்தூரிபாய்
78. இந்திய விடுதலைக்குப் பிறகு ஒரு பியுன் வேலையைக் கூட தன் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வதை விரும்பாதவர்
➯ காந்திஜி
79. வன்முறை தவிர்த்து விடுதலைக்குப் போராடியவர்
➯ காந்திஜி
80. விடுதலைக்கான போராட்டத்தில் நீ சிறையில் மரணம் அடைந்தால் உன்னை தெய்வமாக வழிபடுவேன் என்று கஸ்தூரிபாயிடம் கூறியவர்
➯ காந்திஜி
81. காந்தியடிகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எது?
➯ மது, மாமிசம் தவிர்த்தல் மற்றும் அகிம்சை வழியில் வாழ்தல்

சனி, 11 ஜூலை, 2015

கழகத்துக்காக ...5

எது சாதனை !
>>>>>>>>>>>>>>>>>>
யாராலும் செய்யமுடியாதது தான் சாதனை 
ஒருவன் செய்வதை பார்த்து செய்வது சாதனை அல்ல!
அது காப்பியடிப்பு அல்லது நேகாமல் நொங்கு திங்குற திருட்டுத்தணம் !
பிற அரசியல் கட்சிகளால் ,முடியாது , நடக்காது அது சாத்தியப்படாது, என்று நீராகரிக்கப்பட்ட ஒன்றை செய்வதுதான் சாதனை. .அப்படிப்பட்ட சாதனைதான் சென்னை மாகானத்துக்கு தமிழ் நாடு என்று பெயர் சூட்டியது பெருந்தலைவர் காமராஜர் எவ்வளவோ போராடிபார்த்தார் தமிழ் நாடு என்று பெயர் சூட்டமுடியவில்லை காமராஜர் ஆட்சியில் சங்கரலிங்கநாடார் என்பவர் தமிழ் நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று விருது நகரில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் அதன் பிறகாவது தமிழ்நாடு என்று பெயர் சூட்ட முடிந்ததா /? முடியவில்லை முடியாது என்று நிராகரித்துவிட்டார் கர்ம வீரரால் முடியாது என்று சொல்லப்பட்டஒன்றை திராவிட முன்னேற்ற கழகம் பதவி ஏற்ற முதல் அறிவிப்பாக தமிழ்நாடு என்று பெயர் சூட்டி மகிழ்ந்தது இதுதான் சாதனை 
வடநாட்டவர்கள் நினைத்த போதெல்லாம் இந்தியை வலுக்கட்டாயமாக 
திணித்துகொண்டிருந்த காலத்தில் தமிழ்நாட்டில் எப்படியாவது இந்தியை திணித்து விடலாம் என்று கனவு கணடவர்கள் வாயில் அல்வாவை கொடுத்து 
தமிழ்நாட்டில் இரு மொழித்திட்டத்தை சட்டமாக்கியதுதான் மிகப்பெரியசாதனை 
சாதிவிட்டு சாதி மாறி திருமணம் செய்தால் அது சட்டப்படி செல்லாது என்று இருந்த காலத்தில் சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்ற வரலாற்று சிறப்புமிக்க அரசானையை சட்டமாக தந்ததுதான் திராவிட முன்னேற்றகழகம் இதை செய்வதற்கு எந்தகட்சிக்காவது துணிவிருந்ததா ? ஆக யாருமே செய்யாத . செய்ய முடியாத செயலை செய்தது திராவிட முன்னேற்றகழகம் 
ஒரு அரசு எழை விவசாயிகளின் கடன் 7 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்யமுடியுமா ? அரசு திவாலாகி விடாதா ? கலைஞர் தானே சென்று குழிக்குள் விழுகிறார், அது முடியாது என்று எதிர் கட்சிகளும் 
அரசியல் விமர்ச்சகர்களும் வாதம் செய்தபோது 7ஆயிரம் கோடியையும் தள்ளுபடி செய்து அரசையும் திவாலாகாமல் பார்த்துகொண்டவர்தான் கலைஞர் இதுதான் சாதனை ! முடியுமா மற்ற கட்சிகளால் !!
சாதியை ஒழிக்க பெரிய தலைவர்கள் எல்லாம் போராடி முடியாதபோது 
அதன் வேற்றுமைகள் களையபடவேண்டும் அதற்கு அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்க வேண்டும் அப்போதுதான் அவர்கள் சகோதரபாசத்தோடு நடந்து கொள்வார்கள் அதன் முலம் சாதிகளை ஒழிக்கமுடியும் என்று தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரங்களை 
கொண்டுவந்ததுதான் மிகப்பெரிய சாதனை இத்திட்டம் கொண்டுவந்தபோது இத்திட்டத்தினால் சகோதரபாசம் பெருகாது மாறாக ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொள்வார்கள் என்று எதிர் கட்சிகள் விமர்ச்சனம் செய்தார்களே ! எந்த சமத்துவபுரத்திலாவது சண்டைநடந்ததா ? 
தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் மிகப்பெரிய சாதனை அல்லாவா !
இப்படி நூற்றுககணகான சாதனை திட்டங்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் சாதனைகளா இருக்கிண்றன ! அவைகளை எல்லாம் நான் எழுதினால் உங்களுக்கு படிக்க நேரமிருக்காது ஏனென்றால் இந்த நாட்டுக்கு தேவையான அத்துனை திட்டங்களும் கலைஞரால் போட பட்டு விட்டன! 
இனி வரும் அரசுகள் அத்திட்டகளை புனரமைப்பு செய்ய முடியுமே தவிர புதிய திட்டங்கள் போட முடியாது உதாரணத்துக்கு ஒருரூபாய்கு அரிசி தந்தார் கலைஞர் ஜெயலலிதாவோ இலவசம்,ஆக தந்தார் கலைஞரின் திட்டத்தை வீம்புக்காக காப்பியடித்தர் ஒரு ருபாய் என்பது பெரிய பனம் அல்ல அவராலும் இலவசமாக கொடுத்திருக்கமுடியும் அவர் இலவசமாக இருபது கிலோ கொடுத்தால் ஜெயலலிதா 21 கிலோ கொடுப்பார் ஆக கலைஞரின் திட்டங்களை காப்பித்தான் அடிக்கமுடியும் இனிவரும் அரசுகள் 
ஏன் கலைஞர் வந்தாலோ அவர் போட்ட திட்டங்களைத்தான் செம்மை படுத்தமுடியும் காரணம் அத்துனை திட்டங்களும் போட்டாச்சு !!
ஆனால் நான்கு வருட சாதனையை விளக்க ஜெயலலிதா உத்தரவு போட்டுள்ளார் இவரின் சாதனை என்ன ? புதுமையாக என்ன செய்துள்ளார் ? 
யாரும் செய்யாததை செய்திருகிறாறா என்றால் கேள்வி குறிதான் மிஞ்சும் எண்று நினைக்காதீர்கள் யாரும் செய்யாதை பல ஜெயலலிதா செய்துள்ளார் 
ஒரு வழக்கை 18 ஆண்டுகள் இழுத்தடித்துள்ளார் 
அரசியல் வாதி ஒருவர் 100கோடி அபதாரம் வாங்கி சாதனை செய்துள்ளார் 
நான் குற்றம் செய்துவிட்டேன் என்னை மன்னித்து என் உடல் நிலையை கருத்தில் கொண்டு குறைந்த பட்ச தண்டனை தருமாறு நிதிபதி அவர்களை கேட்கிறேன் என்று கெஞ்சியுள்ளார்
ஆக இதுதான் சாதனையே தவிர வேறு எதுவுமில்லை 
இவர் செய்ததை யாரும் இதுவரை செய்யவில்லை 
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஆக வாக்காள பெருமக்களே உங்களுக்காக சாததைனைகள் செய்து 
சரித்திரம் படைத்த திராவிடமுன்னேற்றகழகத்தை
மீண்டும் அரியனை 
ஏற்றி நீங்கள் வளம் பெற வேண்டும் ! 
......................................மும்பை ஆறுமுகப்பாண்டியன்