புதன், 29 அக்டோபர், 2014

தமிழ் உணர்வையும் தமிழின உணர்வையும்

ஒரு விளக்கம்
>>>>>>>>>>>>>>>>>
யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எமக்கில்லை!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தலைப்பு<> காற்றடிக்கும் திசையில் பயனிக்கும்
புதிதாக தோன்றி உள்ள தமிழ் ஆர்வலர்கள்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கடந்த ஞயிறு அன்று மும்பையில் கல்கண்டு ஆசிரியர் திரு. லேனா.. தமிழ்வாணன் அவர்களுக்கு பாராட்டு விழா நடந்ததாகவும்
அதில் மும்பையில் சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்ற ஒரே தமிழர் கேப்பன் தமிழ்செல்வன் அவர்களுக்கும் பாராட்டு நடந்ததாகவும் அதில் நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை?ஒரு தமிழனுக்கு பாராட்டு விழா நடைபெருகிறது அதில் கலந்து கொள்ளவில்லை என்று அந்த நண்பர் என்னை கேட்டிருந்தால் இந்த விளக்கத்திற்கு அவசியமில்லை அவர் ஒருபடி மேலே போய் உங்கள் கட்சி தலைமை சொன்னால்தான் கலந்துகொள்விர்களா? என்ன தமிழுணர்வு? என்று ஒருவித இகழ்ச்சியோடு
நண்பரென்ற முறையில் நக்கலாக இந்த கேள்வியை என்னிடம் வைத்தார்
இது போன்று நிறைய நண்பர்களுக்கு இந்த சந்தேகம் இருக்கும்
திட்டமிட்டு திராவிடமுன்னேற்ற கழகத்துக்கு பாரதிய ஜனதாவை பிடிக்காது ஆகவே பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் சட்டமன்ற உறுப்பினரை
பாராட்ட. வாழ்த்த செல்லவில்லை என்று ஒரு வதந்தியை கிளப்பி
அதன்முலம் தமிழ்செல்ல்வன் அவர்களிடத்தில் ஆதாயம் பெற நினைக்கின்றவர்களுக்குத்தான் இனிவரும் எனது பதில்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தந்தை பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்று சொன்ன ராஜாவுக்கு தேசிய அளவில் பதவி கிடைத்தபோது துணிந்து தமிழனுக்கு பதவிகிடைத்திருக்கிறது நான் வாழ்த்துவேன் என்று வாழ்த்திய தலைவரின் தொண்டர்கள் நாங்கள் .
டாக்டர் தமிழிசை அவர்களுக்கு மாநில பொருப்பு கிடைத்தபோது மகிழ்ந்து வாழ்த்து சொன்ன தலைவனின் வழியில் வந்தவர்கள் நாங்கள்
அப்படிபட்ட நாங்கள் தமிழனுக்கு விழா எடுக்கும்போது கலந்துகொள்ளமாட்டோமா ? தமிழ்ச்செல்வன் அவர்கள் ஜெயித்தவுடன் நான் சென்று வாழ்த்தி மலர் செண்டு கொடுத்து சால்வை அணிவித்து வாழ்த்தினேன் இலக்கிய அணிச்செயலாளர் தமிழ்நேசன் சென்று வாழ்த்தினார்கள் இளைஞர் அணி அமைப்பாளர் சேசுராஜ் வாழ்த்தினார்
அப்படியிருக்க !வாழ்த்தவில்லை என்று குறை கூறுவது முழுபூசனிக்காயை சோற்றில் மறைக்கும் செயலல்லவா?
இருந்தாலும் ஒரு பேச்சுக்கு
விழா நடத்திய அமைப்பு எங்களுக்கு அழைப்பு அனுப்பியதா?
எங்கள் மாவட்ட செயலாளருக்கு செய்தியாவது கொடுத்ததா?
ஒரு போன் செய்துதாவது அழைப்பு விடுத்ததா?
பிறகு எப்படி நாங்கள் வரவில்லை என்று குறைபட்டுகொள்ளலாம்
விழா நடத்திய விழாவின் அமைபாளர் இதை கண்டு கொள்ள வில்லை!
இவர்களுக்கு என்ன வந்தது !
ஆனால் புதிதாக தோன்றி உள்ள தமிழ் ஆர்வலர்கள் குய்யோ முய்யோ என்று பிதற்றுகிறார்கள் அய்யையோ ஒரு தமிழனுக்கு பாராட்டு விழா நடக்குது இருபது லட்சம் தமிழர்கள் கொண்ட மும்பையில் இரண்டு மிகபெரிய பிரபலங்கள் வந்திருக்க குறைவான் எண்ணிக்கையில் வந்துள்ளார்கள்
தமிழன் என்ற உணர்வு செத்துவிட்டது என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்
இந்த புதிதாக தோன்றி உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கு
எப்படி இந்த தமிழுணர்வு வந்தது தமிழன் ஜெயித்துவிட்டான் என்பதாலா? அப்படியானால் மாநகராச்சி தேர்தலில் 20 வருடங்களாக ஜெயித்து வரும் தமிழர் அண்ணாமலை அவர்களுக்கு திருமதி லலிதா அண்ணமலை அவர்களுக்கும் ஏன் பாராட்டு நடத்தவில்லை ?காங்கிரஸ் கட்சியில் ஜெயித்து வரும் வேலுச்சாமி நாயுடு அவர்களுக்கு இந்த புதிதாக தோன்றி உள்ள தமிழ் ஆர்வலர்கள் விழா எடுக்காதது ஏன் ? பிவண்டி மாநகராட்சியில் ஜெயித்த தமிழர் நித்தியாணந் சங்கர் அவர்களை இந்த புதிதாக தோன்றி உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கு தெரியுமா? அம்பர்நாத் மாநராட்சியில் ஜெயித்த தமிழர் திரு சித்தார்த்தன் தமிழன் இல்லையா?
காங்கிரஸ் கட்சியும்
பாரதிய ஜனதாகட்சியும்
சிவசேனா கட்சியும்
நேசனல் காங்கிரஸ் கட்சியும்
நவநிமான்சேனா கட்சியும்
தமிழர் பிரிவுகளுக்கு தலைவர்களை அறிவித்தபோது இந்த புதிதாக தோன்றி உள்ள தமிழ் ஆர்வலர்கள் பாராட்டு விழா எடுத்தார்களா?
அப்போதெல்லாம் உங்கள் தமிழுணர்வு எங்கே போனது ?
திராவிட முன்னேற்ற கழகத்தவர்கள் வரவில்லை என்று வருத்தபடும் புதிதாக தோன்றி உள்ள தமிழ் ஆர்வலர்களே மும்பையில் எத்தனை அமைப்பு இருக்கிறது ஏன் அவர்களை குறைசொல்ல வில்லை ?
எங்களை மட்டும் நாகூசாமல் குறை சொல்லுகிறீர்கள்
இத்தனைக்கும் மராட்டிய மாநில தமிழ்சங்கங்களின் கூட்டமைப்புக்கு கேப்டன் தமிழ்செல்வன் அவர்கள் தானே தலைவர் பிறகு ஏன் ஆள்கள் வரவில்லை
கூட்ட அமப்பாளர்களின் சரியான அனுகுமுறை இல்லாததே காரணம் என்பது இந்த புதிதாக தோன்றி உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை
புதிதாக தோன்றி உள்ள தமிழ் ஆர்வலர்களே!
நீங்கள் மேடைகளுக்காகவும்
சால்வைகளுக்காகவும்
வேண்டுமானால் காற்றடிக்கும் திசையில் பயனிக்கலாம்
கொஞ்ச காலம் ஈழ ஆதரவு என மேடை பிடித்தீர்கள்
இபோது ஈழம் உங்களுக்கு மறந்திருக்குமே?
இனி தமிழன் உணர்வு என்ற தலைப்பில்
மேடையில் இடம் பிடித்துகொள்ளுங்கள் எங்களுக்கு கவலையில்லை
நாங்கள் வரவில்லையே என்று வருத்தப்பட்டிர்களே
அதுதான் எங்கள் வெற்றி
! நாங்கள் காற்றடிக்கும் திசையில் பயனிப்பவர்கள் அல்ல, கொண்ட கொள்கைக்காக எதிர் திசையிலும் பயனிப்பவர்கள்
எங்களுக்கு கொள்கை உண்டு
யாரை எப்போது எங்கே பாராட்ட வேண்டும்
என்று எங்களுக்கு தெரியும்
திராவிட முன்னேற்ற கழகத்தின்
தமிழ் உணர்வையும்
தமிழின உணர்வையும்
சந்தேகிக்க மும்பையில் மட்டுமல்ல
உலகத்திலே யாருக்கும் தகுதி இல்லை
அல்ல அல்ல எவனுக்கும் தகுதி இல்லை
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
க . ஆறுமுகப்பாண்டியன்
மும்பை புறநகர் திராவிட முன்னேற்றகழக
இலக்கிய அணித்தலைவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக