சனி, 11 ஜூலை, 2015

கழகத்துக்காக ...5

எது சாதனை !
>>>>>>>>>>>>>>>>>>
யாராலும் செய்யமுடியாதது தான் சாதனை 
ஒருவன் செய்வதை பார்த்து செய்வது சாதனை அல்ல!
அது காப்பியடிப்பு அல்லது நேகாமல் நொங்கு திங்குற திருட்டுத்தணம் !
பிற அரசியல் கட்சிகளால் ,முடியாது , நடக்காது அது சாத்தியப்படாது, என்று நீராகரிக்கப்பட்ட ஒன்றை செய்வதுதான் சாதனை. .அப்படிப்பட்ட சாதனைதான் சென்னை மாகானத்துக்கு தமிழ் நாடு என்று பெயர் சூட்டியது பெருந்தலைவர் காமராஜர் எவ்வளவோ போராடிபார்த்தார் தமிழ் நாடு என்று பெயர் சூட்டமுடியவில்லை காமராஜர் ஆட்சியில் சங்கரலிங்கநாடார் என்பவர் தமிழ் நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று விருது நகரில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் அதன் பிறகாவது தமிழ்நாடு என்று பெயர் சூட்ட முடிந்ததா /? முடியவில்லை முடியாது என்று நிராகரித்துவிட்டார் கர்ம வீரரால் முடியாது என்று சொல்லப்பட்டஒன்றை திராவிட முன்னேற்ற கழகம் பதவி ஏற்ற முதல் அறிவிப்பாக தமிழ்நாடு என்று பெயர் சூட்டி மகிழ்ந்தது இதுதான் சாதனை 
வடநாட்டவர்கள் நினைத்த போதெல்லாம் இந்தியை வலுக்கட்டாயமாக 
திணித்துகொண்டிருந்த காலத்தில் தமிழ்நாட்டில் எப்படியாவது இந்தியை திணித்து விடலாம் என்று கனவு கணடவர்கள் வாயில் அல்வாவை கொடுத்து 
தமிழ்நாட்டில் இரு மொழித்திட்டத்தை சட்டமாக்கியதுதான் மிகப்பெரியசாதனை 
சாதிவிட்டு சாதி மாறி திருமணம் செய்தால் அது சட்டப்படி செல்லாது என்று இருந்த காலத்தில் சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்ற வரலாற்று சிறப்புமிக்க அரசானையை சட்டமாக தந்ததுதான் திராவிட முன்னேற்றகழகம் இதை செய்வதற்கு எந்தகட்சிக்காவது துணிவிருந்ததா ? ஆக யாருமே செய்யாத . செய்ய முடியாத செயலை செய்தது திராவிட முன்னேற்றகழகம் 
ஒரு அரசு எழை விவசாயிகளின் கடன் 7 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்யமுடியுமா ? அரசு திவாலாகி விடாதா ? கலைஞர் தானே சென்று குழிக்குள் விழுகிறார், அது முடியாது என்று எதிர் கட்சிகளும் 
அரசியல் விமர்ச்சகர்களும் வாதம் செய்தபோது 7ஆயிரம் கோடியையும் தள்ளுபடி செய்து அரசையும் திவாலாகாமல் பார்த்துகொண்டவர்தான் கலைஞர் இதுதான் சாதனை ! முடியுமா மற்ற கட்சிகளால் !!
சாதியை ஒழிக்க பெரிய தலைவர்கள் எல்லாம் போராடி முடியாதபோது 
அதன் வேற்றுமைகள் களையபடவேண்டும் அதற்கு அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்க வேண்டும் அப்போதுதான் அவர்கள் சகோதரபாசத்தோடு நடந்து கொள்வார்கள் அதன் முலம் சாதிகளை ஒழிக்கமுடியும் என்று தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரங்களை 
கொண்டுவந்ததுதான் மிகப்பெரிய சாதனை இத்திட்டம் கொண்டுவந்தபோது இத்திட்டத்தினால் சகோதரபாசம் பெருகாது மாறாக ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொள்வார்கள் என்று எதிர் கட்சிகள் விமர்ச்சனம் செய்தார்களே ! எந்த சமத்துவபுரத்திலாவது சண்டைநடந்ததா ? 
தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் மிகப்பெரிய சாதனை அல்லாவா !
இப்படி நூற்றுககணகான சாதனை திட்டங்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் சாதனைகளா இருக்கிண்றன ! அவைகளை எல்லாம் நான் எழுதினால் உங்களுக்கு படிக்க நேரமிருக்காது ஏனென்றால் இந்த நாட்டுக்கு தேவையான அத்துனை திட்டங்களும் கலைஞரால் போட பட்டு விட்டன! 
இனி வரும் அரசுகள் அத்திட்டகளை புனரமைப்பு செய்ய முடியுமே தவிர புதிய திட்டங்கள் போட முடியாது உதாரணத்துக்கு ஒருரூபாய்கு அரிசி தந்தார் கலைஞர் ஜெயலலிதாவோ இலவசம்,ஆக தந்தார் கலைஞரின் திட்டத்தை வீம்புக்காக காப்பியடித்தர் ஒரு ருபாய் என்பது பெரிய பனம் அல்ல அவராலும் இலவசமாக கொடுத்திருக்கமுடியும் அவர் இலவசமாக இருபது கிலோ கொடுத்தால் ஜெயலலிதா 21 கிலோ கொடுப்பார் ஆக கலைஞரின் திட்டங்களை காப்பித்தான் அடிக்கமுடியும் இனிவரும் அரசுகள் 
ஏன் கலைஞர் வந்தாலோ அவர் போட்ட திட்டங்களைத்தான் செம்மை படுத்தமுடியும் காரணம் அத்துனை திட்டங்களும் போட்டாச்சு !!
ஆனால் நான்கு வருட சாதனையை விளக்க ஜெயலலிதா உத்தரவு போட்டுள்ளார் இவரின் சாதனை என்ன ? புதுமையாக என்ன செய்துள்ளார் ? 
யாரும் செய்யாததை செய்திருகிறாறா என்றால் கேள்வி குறிதான் மிஞ்சும் எண்று நினைக்காதீர்கள் யாரும் செய்யாதை பல ஜெயலலிதா செய்துள்ளார் 
ஒரு வழக்கை 18 ஆண்டுகள் இழுத்தடித்துள்ளார் 
அரசியல் வாதி ஒருவர் 100கோடி அபதாரம் வாங்கி சாதனை செய்துள்ளார் 
நான் குற்றம் செய்துவிட்டேன் என்னை மன்னித்து என் உடல் நிலையை கருத்தில் கொண்டு குறைந்த பட்ச தண்டனை தருமாறு நிதிபதி அவர்களை கேட்கிறேன் என்று கெஞ்சியுள்ளார்
ஆக இதுதான் சாதனையே தவிர வேறு எதுவுமில்லை 
இவர் செய்ததை யாரும் இதுவரை செய்யவில்லை 
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஆக வாக்காள பெருமக்களே உங்களுக்காக சாததைனைகள் செய்து 
சரித்திரம் படைத்த திராவிடமுன்னேற்றகழகத்தை
மீண்டும் அரியனை 
ஏற்றி நீங்கள் வளம் பெற வேண்டும் ! 
......................................மும்பை ஆறுமுகப்பாண்டியன்

வெள்ளி, 10 ஜூலை, 2015

கழகத்துக்காக ....4

திராவிட முன்னேற்ற கழகம் என்னும் ஆலமரத்தின் 
ஆணிவேரை அசைத்துப்பார்த்தவர்கள் 
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஈ வெ கி சம்பத்
பேரறிஞர் அண்ணாவையே 
கலங்க வைத்தவர்
கண்ணிர் விட வைத்தவர்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
எம் .ஜி. ஆர்
கலைஞரை கலங்க வைத்தவர்
ஒரு கட்டத்தில் திராவிடமுன்னேற்றகழகத்தை
அழிக்காமல் விடமாட்டேன் என்று சபதம் செய்தவர்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
வைகோ
கழகத்தாலே வளர்ந்து
கழகத்தையே அழிக்க நினைத்த பச்சை துரோகி !
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இவர்கள் கழகத்தை வேரோடு வேரடி மன்னோடும்
வீழ்த்திவிடலாம் என்று கனவு கண்டு தோற்று போனவர்கள்
சிலர் சொல்வார்கள் எம்ஜிஆர் வெற்றி பெற்றாரே என்று
அவர் தனி கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்தாரே ஒழிய
திராவிட முன்னேற்ற கழகத்தை அழிக்கமுடிந்ததா ?
இந்த முப்பெரும் துரோகிகளாலே அழிக்க முடியாதபோது
நேற்று பெய்த மழையில் இன்று முழைத்த காளான்கள்
திராவிட முன்னேற்ற கழகத்தை அழிப்பேன் ஒழிப்பேன்
என்பது முடவன் கொம்புதேனுக்கு ஆசைப்பட்டகதைதான் !
தமிழ் உள்ள வரை !
தமிழன் உள்ளவரை !
தமிழகம் உள்ளவரை !
ஏன் ….உலக உயிரினம் உள்ளவரை
திராவிட முன்னேற்ற கழகத்தை எந்த கொம்பனாலும்
அழிக்கவோ அசைக்கவோ முடியாது !
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
……………மும்பை ஆறுமுகப்பாண்டியன்



கழகத்துக்காக ....3

இளைஞர்களுக்கு கலைஞரின் வேண்டுகோள் 
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இளைஞர்கள் மாணவர்கள்
எழுஞாயிறுகளாக ஒளிவிட
வரலாறு படியுங்கள்-
வரலாற்று நாயகர்களை வணங்குங்கள்-
வீரர்களை அறிந்து கொள்ளுங்கள்-
விவேகிகளைப் புரிந்து கொள்ளுங்கள்-
விஞ்ஞானிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்-
விஞ்ஞானப் புதுமைகளைக் கற்றுக் கொள்ளுங்கள்-
தியாகிகளைப் பாராட்டுங்கள்- நமது
திருநாட்டைப் பாதுகாத்திடுங்கள்!
வாழ்க்கைப் பயணத்தைப் பகுத்தறிவு
வழியில் மேற்கொள்ளுங்கள்!
உழைத்து உயர்ந்தவர்களைப் புத்தகமாகப் படியுங்கள்!
முயற்சியினால் முன்னேறியவர்களை வழிகாட்டிகளாக ஏற்றிடுங்கள்.

கழகத்துக்காக ....2

இளைஞர் சமுதாயமே ! 
கலைஞரைப்பற்றி தெரிந்துகொள் !
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கலியுக இயேசு பிரான் எங்கள் கலைஞர் 
……………….( மண்ணிப்பதில் )……………………………..
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இந்த அடைமொழி சரிதானா ? 
பகுத்தறிவு பாதையில் செல்லும் ஒரு தலைவருக்கு கலியுக இயேசு பிரான்
என்ற அடை மொழியைத்தருவதா ? அது ஏற்புடையதல்லவே !
இந்த அடைமொழியை நான் உச்சரிக்க காரணத்தை கிழே பதிவு செய்துள்ளேன் இந்த அடைமொழியை என் தலைவர் கலைஞர் விரும்பமாட்டார் என்பதும் உண்மை 
வரலாற்றை திரும்பிப்பார்க்கிறேன் சில சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன கவியரசு கண்ணதாசனை உங்களுக்கு தெரியும் 
கலைஞரை என் காதலி என்று வர்ணித்தவர் பிற்காலத்தில் தனக்கு அரசியலில் இடமில்லாமல் போகவே , கலைஞரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சணம் செய்து வயிறு வளர்த்தவர் அதாவது கலைஞரை கீழ்தரமாக 
எழுதி அதன்முலம் வரும் பணத்தில் வாழ்ந்தவர் இதே கண்ணதாசன் அண்ணாவையும் விட்டு வைக்கவில்லை பணத்துக்காக தன் ரகசியத்தையும் விற்றவர்தான் இந்த கண்ணதாசன் .. ஆக ஏட்டில் கலைஞரை தரக்குறைவாக எழுதியதால் இன்று அந்த எடுகளை படிப்பவர்கள் கலைஞர் இவ்வளவு மோசமானவரா என்று சிந்திக்க வேண்டியது வரும், எனென்றால் ஏட்டில் எழுதியதை அழிக்கமுடியாது அப்படி அழிக்கமுடியாத கறையை எற்படுத்திய கண்ணதசனை பிற்காலத்தில் பழிதீர்த்தாரா என்றால் இல்லையென்றே வரலாறு சொல்கிறது காலை வாரி விட்டன்னையே வாரிஅனைத்து 
உச்சிமுகந்து பதவி கொடுத்து அழகு பார்த்தவர்தானே கலைஞர் 
அது மட்டுமல்ல எத்தனைமுறை தோல்வியதந்தாலும் 
தமிழினமே தமிழினமே என்ன கடலிலே தூக்கி போட்டாலும் 
உனக்காக மரக்கலணாக மிதப்பேன் என்று சொன்னவர்தானே கலைஞர்
கண்ணதாசன் இறந்தபோது அவருக்காக கண்ணிர் விட்டு 
எழுதிய கவிதையை படித்து பாருங்கள் கலைஞரின் அருமை தெரியும் 
எண்ணம் தானே எழுத்து 
உள்ளத்தில் இருப்பதுதானே பேச்சாக வெளியில் வரும்
வரலாற்றில் மறைக்கமுடியாத கறையை ஏற்படுத்திய 
கண்ணதாசனுக்கு வரலாறு மறக்க முடியாத 
கலஞர் எழுதிய கவிதாஞ்சலியை படித்து பாருங்கள் 
என் இனிய நண்பா
இளவேனிற் கவிதைகளால்
இதய சுகம் தந்தவனே! உன்
இதயத்துடிப்பை ஏன் நிறுத்திக் கொண்டாய்!
தென்றலாக வீசியவன் நீ - என்நெஞ்சில்
தீயாகச் சுட்டவனும் நீ! அப்போதும்
அன்றிலாக நம் நட்பு நிகழ்ந்ததேயன்றி
அணைந்த தீபமாக ஆனதே இல்லை; நண்பா!
கண்ணதாசா! என்
எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா!
கவிதை மலர்த் தோட்டம் நீ - உன்னைக்
காலமெனும் பூகம்பம் தகர்த்துத்
தரைமட்டம் ஆக்கிவிட்டதே!
கைநீட்டிக் கொஞ்சுவோர் பக்கமெல்லாம்
கரம் நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ!
கல்லறைப் பெண்ணின் மடியிலும்
அப்படித்தான் தாவி விட்டாயோ
அமைதிப்பால் அருந்தித் தூங்கி விட!
இயக்க இசைபாடிக்களித்த குயில் உன்னை
மயக்க மருந்திட்டுப் பிரித்தார் முன்னை
தாக்குதல் கணை எத்தனைதான் நீ
தொடுத்தாலும்
தாங்கிக் கொண்ட என்நெஞ்சே உன் அன்னை!
திட்டுவதும் தமிழில் நீ திட்டியதால் - சுவைப்பிட்டு என ஏற்றுக் கொண்ட என்னை;
தித்திக்கும் கவித்தமிழா! பிரிவின்
மத்தியிலே ஏன் விட்டுச் சென்றாய் ?
அடடா! இந்த இளமைக் கழனியில்
அன்பெனும் நாற்று நட்டோம்!
ஆயிரங்காலத்துப் பயிர் நம் தோழமையென ஆயிரங்கோடி கனவு கண்டோம்!
அறுவடைக்கு யாரோ வந்தார்!
உன்னை மட்டும் அறுத்துச் சென்றார்
நிலையில்லா மனம் உனக்கு! ஆனால்
நிலைபெற்ற புகழ் உனக்கு!
இந்த அதிசயத்தை விளைவிக்க உன்பால்
இனியதமிழ் அன்னை துணை நின்றாள்!
என் நண்பா!
இனிய தோழா!
எத்தனையோ தாலாட்டுப்பாடிய உன்னை
இயற்கைத் தாய் தாலாட்டித் தூங்க வைத்தாள்!
எத்தனையோ பாராட்டுப் பெற்ற உனக்கு
இயற்கைத்தாயின் சீராட்டுத்தான் இனிக்கிறதா?
எனை மறந்தாய்! எமை மறந்தாய்! உனை
மறக்க முடியாமல் உள்ளமெல்லாம் நிறைந்தாய்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இளைஞர் சமுதாயமே ! ஒரே நேரத்தில் பல பேர்களைப்பற்றி
எழுதினால் நீ படிக்கமாட்டாய் என்பது எனக்கு தெரியும் ! ஆகவே அடுத்த பதிவில் பார்ப்போம் !
மும்பை ஆறுமுகப்பாண்டியன்


புதன், 8 ஜூலை, 2015

கழகத்துக்காக

இந்த பதிவை உங்களால் படிக்க முடியுமா?
படித்தால் மட்டும் லைக் செய்யவும்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 
நடு நிலை வாக்காளரும் நானும் !
>>>>>>>>>>>>>>>> 
ஒரு வாக்காளரிடம் யாருக்கு ஒட்டு போடுவிங்கன்னு கேட்டேன்
 அவர் சொன்னார்  அதை இன்னும் முடிவு பன்னவில்லை என்றார்
ஏன் பண்ணவில்லை .. அது வந்து இழுத்தார்
 உங்கள் வீட்டில் இரண்டுலட்சம் ரூபாய் விவசாய கடன் இருந்ததே  கட்டி முடிச்சிங்களா ?நான் கேட்டேன்
நான் எங்க கட்டினேன்  கலைஞர் தான்  தள்ளுபடி செய்து எங்க மானத்தை காப்பாதினார்
 அப்ப அவருக்கு ஒட்டு போடலாமே !
போடலாம் ஆனாலும் ……… இழுத்தார்
சரி அதை விடுங்க  உங்க வீட்டில் டிவி இல்லாம இருந்ததே டிவி வாங்கியாச்சா ? அப்பாவியாக நான் கேட்டேன்
நான் எங்க வாங்கிறது கலைஞர்தான் இலவச டிவியும் தந்தாரு
எனக்கு ஒன்னு எங்க அம்மாவுக்கு ஒன்னு என் தம்பிக்கு ஒன்னு  மொத்தம் எங்க குடும்பத்தில் ஒன்பது   இலவச டிவி வாங்கீருக்கோம் கலைஞர் புன்னியத்தில்  வெகுளியாக பதில் சொன்னார்
அப்படியின்னா இலவச டிவி தந்த கலைஞருக்கு ஒட்டு போடலாமே  நானும் வெகுளியாகக்கேட்டேன்
போடலாம் ………………………………ஆனாலும் மீண்டும் இழுத்தார்
சரி விடுங்க உங்க விட்டில் அடுப்பங்கரையில்  விறகையே கானோம்
நான் கேட்டேன்
அய்யோ உங்களுக்கு தெரியாதா ? கலைஞர் எங்களுக்கு இலவசமாக கேஸ் அடுப்பு
 தந்திருக்காரே , நாங்க ஏன் விறகு  அடுப்பை தேடனும்
அவர் சிரித்து சொன்னார்
 நான் வெறுத்துக்கேட்டேன்  அப்படின்னா  கலைஞருக்கு ஒட்டுபோடலாமே !
 போடலாம்  ஆனாலும் இன்னும் இழுத்தார் அவர்
சரி உங்க மகள் கல்யாணத்தை முடிக்க சிரமப்பட்டிங்களே எப்படி நடந்தது
நான் தெரியாதது மாதிரி கேட்டேன்
ஓ அதுவா  கலைஞரின் முவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் திருமண உதவி திட்டத்தின் முலம் 25 ஆயிரம் ரூபாய் கிடைத்தது அதை வைத்து சமாளித்தேன்
பெருமை பட்டுக்கொண்டார்
 அப்படியின்னா அதுக்காகவாது கலைஞருக்கு ஒட்டு போடலாமே  ஏக்கத்தோடு நான் கேட்டேன்
போடலாம் ஆனாலும்  மேலும் இழுத்தார்
 உங்களுக்கு பேத்தி பிறந்திருக்குதாமே மகிழ்சியாக நான் கேட்டேன்
 ஆமா ஆமா மாகாலட்சுமி மாதிரி பெண் பிள்ளை பிறந்திருக்கு
கலைஞரின் மகபேறு உதவி திட்டதினால் ஒரு பைசா செலவில்லாமல்
தாயும் சேயும் நலம் துள்ளி குதித்தார்
அதே மகிழ்ச்சியில் நான் கேட்டேன் அப்படியின்னா கலைஞருக்கு ஒட்டு போடலாமே
மீண்டும் அதே பல்லவி போடலாம் … ஆனாலும்
விடுங்க சார்! உங்களுக்கும் உங்க் தம்பிக்கும்  வயதான அம்மாவுக்கு யார் சோறு போடனுமின்னு சண்டை வந்ததே  முடிஞ்சிருச்சா  நான் கேட்டேன் !
அதைஏன் கேட்கிறீங்க கலைஞரின் முதியோர் ஒய்வுதிய திட்டத்தின் முலம்  அந்த சண்டைமுடிந்தது  இப்ப எங்க அம்மா சந்தோசமாக இருக்காங்க கலைஞர் கொடுத்த பணத்தில் சாப்பிடுறாங்க இப்ப் எங்களுக்கு எங்க அம்மா தொந்தரவு இல்லை  நிம்மதி பெருமுச்சு விட்டார்
 இந்த சமயத்திலாவது ஒட்டுகேட்கலாமே என்று இனி கலைஞருக்குத்தானே ஒட்டு போடுவிங்க
போடலாம் ஆனாலும் மேலும் இழுத்தார்
 எரிச்சலுடன் எனங்க பிறப்புமுதல் இறப்பு வரை கலைஞர் திட்டத்தால் வாழ்தேன்னு சொல்லுறீங்க  இன்னும் கலைஞர் திட்டம் எதுவெல்லாம் கிடைத்திருக்குது கேட்டேன்
 பெருமையாக சொன்னார் அவர்
என் குழந்தைகள் பள்ளி கூடம் செல்ல இலவச சைக்கிள்
பஸ்ஸில் சென்றால் இலவச பஸ் பாஸ்
பட்டதாரி இல்லாத குடும்பத்தில் இருந்து படிக்கும் குழந்தக்கு  அது படிக்கும் வரை இலவச கல்வி
 ஒரு ரூபாய்கு அரிசி தந்தாரு
ஏன் கலைஞரின் காங்கீரிட் வீடு திட்டத்தில் எனக்கு வீடு கூட கிடைத்திருக்குதே பெருமையாக சொன்னார்
இதுதான் சமயம் என்று அப்படின்னா  கலைஞருக்கு ஒட்டு போடலாமே !
நான் கேட்க
 அவர் தலையை சொறிந்து விட்டு போடலாம் ஆனாலும் என்றாரே!
நான் கோவத்தோடு இத்தனையும் அனுபவித்துவிட்டு ஆனாலு ஆனாலு என்று இழுக்கிறீங்களே அது என்ன ஆனாலும்  நான் சீறினேன்
அது ஒன்னுமில்லைங்க  ஒட்டு போடுற நேரத்தில் ஒரு ஒட்டுக்கு  அயிரம் இரண்டாயிரமின்னு தாராங்க  ! பணம் தரும்போது வாங்கத்தானே வேண்டியதிருக்கு  ! கைநீட்டி பனம் வாங்கின பிறகு  நம்பிக்கை துரோகம் செய்யகூடாதல்லவா 1 அதுதான் யோசிக்க வேண்டியதிருக்கு என்றார் அவர்
 ஒரு நாள் கிடைக்கிற ஆயிரத்துக்கும் இரண்டாயிரத்துக்கும் நம்பிக்கையைப்பற்றி பேசுறியே பிறப்பு முதல் இறப்பு வரை கலைஞரின் திட்டத்தால் வாழ்ந்து வரும் நீ நம்பிக்கைப்பற்றி பேசுறீயே உனக்கெல்லாம் வெட்கமாக இல்லை ! நீயெல்லம் மனுசனா? நன்றிகெட்டவனேன்னு  இனிய இரவு வணக்கம் 
கேட்ககனுமின்னு நினைச்சேன் ஆனால் கலைஞரின்
மறப்பது மக்களின் இயல்பு !
நினைவுபடுத்துவது கழக தொண்டனின் கடமை !
என்ற பொன்மொழி நினைவுக்கு வந்ததால்
பொதுஜனத்தை குற்றம் சொல்லாமல்
 கலைஞரின் இன்னும் பல அரிய திட்டங்களை எடுத்துசொல்லி
 வரும் தேர்தலிலாவது  குழப்பமில்லாமல் கலைஞருக்கு  ஒட்டு போடுங்கள் என்று பணிவுடன் ஒட்டுகேட்டு  பெருமுச்சு விட்டேன் !!

......................மும்பை ஆறுமுகப்பாண்டியன் 

நான் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள்

















காமராஜர்

படித்தேன் ...கண்களில் கண்ணிர் பெருகியது 
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
முதலமைச்சர் காமராஜரும்.. பிரதமர் நேருவும்.. கூட்டமொன்றில் பங்கேற்க.. மதுரை அருகே.. காரில் சென்று கொண்டிருந்தார்கள்..!!
உரையாடலின் நடுவே.. நினைவு வந்தவரான. நேரு. " மிஸ்டர் காமராஜ் உங்கள் சொந்த ஊர் இந்த பக்கம் தானே..? என்று கேட்கிறார்..!!
"ஆமாங்க இன்னும் கொஞ்சம் தூரத்தில் தான் இருக்கிறது..!!என்கிறார் காமராஜர்..!!
"அப்படியானால் உங்கள் தாயாரை பார்த்து விட்டு.. நலம் விசாரித்து விட்டு செல்ல வேண்டும் அல்லவா..? என்று நேரு அவர்கள் கேட்க..
"இப்பவே கூட்டத்திற்கு நேரம் ஆகி விட்டதே..?" என்று காமராஜர் மறுக்கிறார்..!!
அதற்கு நேரு அவர்கள்...
"இவ்வளவு தூரம் வந்து விட்டு.. உங்கள் தாயாரை பார்க்காமல் சென்றால்.. நன்றாக இருக்காது.. நான் பார்த்தே ஆக வேண்டும்.. என்னை அவர்களிடம் கூட்டிச் செல்லுங்கள்..!!" என்று அன்பு கட்டளையிடுகிறார்
ஆமோதித்த காமராஜர்..
வண்டி சற்று தூரம் சென்றதும்.. ஓட்டுனரிடம்.." தம்பி வண்டியை இப்படி ஓரங்கட்டு..!!" என்று வண்டியை நிறுத்த சொல்கிறார்..!!
அது வீடுகளே இல்லாத பகுதி.. இரு புறங்களிலும் விவசாய நிலங்கள் பகுதி..!!
அந்த நிலங்களில் பெண்கள் களை பறித்து கொண்டிருந்தனர்..!!
தாயாரை பார்க்க வீட்டுக்கு அழைத்து.. செல்ல சொன்னால் இப்படி அத்துவான வெயிலில்.. வண்டியை நிறுத்தியிருக்கிறாரே..! என்ற வினாவுடன் வண்டியை விட்டு இறங்குகிறார் நேரு..
காமராஜர்
களை பறித்து கொண்டிருக்கும் பெண்கள்.. கூட்டத்திலிருந்து வயதான பெண்மணி.. ஒருவரை அழைக்கிறார்...
"ஆத்தா நான் காமராசு வந்து இருக்கிறேன்.."!! என்று கூவுகிறார்..!!
வயலில் உழைத்து வியர்வை முகத்துடன்.. "காமராசு வந்திட்டியாப்பா.. நல்லாயிருக்கியா..?" என்று தன் மகனை கண்ட மகிழ்ச்சியில்.. உள்ளம் நெகிழ.. அருகில் வருகிறார்.. காமராஜரின் தாயார்..!!
தாயும் மகனும் அளவளாவிக் கொள்கிறார்கள்..!!
பிறகு நேரு அவர்களை காட்டி.. அறிமுக படுத்துகிறார் காமராஜர்..!!
நேருவால்
தன் முன்னால் நடப்பதை பார்த்து.. நம்ப முடியாமல் சிலையாக நிற்கிறார்..!!
அவர் தான் நம் காமராஜர்..!

திராவிட முன்னேற்ற கழகம்



இளைஞர் சமுதாயமே!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கழக வரலாற்றை ஒரு முறை படி !
உலக வரலாற்றில் தமிழுக்காக ,கழகம்
ஆற்றிய தொண்டினை படி !
எந்த கட்சியாவது
தமிழ் வளரவேண்டும்
தமிழன் வாழவேண்டும்
தமிழ்நாடு முன்னேறவேண்டும்
என்றுசொன்னதுன்டா வரலாற்றை
மீண்டும் படி !
தமிழுக்காக கழகம் சிந்திய ரத்தத்தை படி !
தமிழனுக்காக கழகம் வாங்கிய அடியை படி !
திராவிடமுன்னேற்ற கழக தலைவர்களின்
தோல்வியை படி!
கழகத்துக்கு ஆரியர்கள் கொடுத்த நெருக்கடியை படி!
கலைஞர் பட்ட அவமானத்தை படி!
தமிழை செம்மொழி ஆக்கி தந்த
என் தலைவர் கலைஞரை படி!
தளதியின் தன்னிகரில்லா உழைப்பைப்படி !
கலைஞர் தமிழகத்துக்கு
தந்த அரும் பெரும் திட்டங்களை
சாதனைகளை திரும்ப திரும்ப படி !
படித்தாயா இளைஞனே !
படி படி மீண்டும் ஒருமுறை
எம் கழகத்தை படி
இப்போழுது; கழகத்துக்கு களங்கம்
கற்பிக்கும் கயவர்கள்
யாரென உனக்கு தெரியும் !
கழகத்துக்கு எதிராக
ஊழையிடும் நரிகளை உனக்கு தெரியும்!
கழகத்துக்கு துரோகம் செய்த தூரோகிகளை தெரியும் !
கழக ஆட்சிக்கு வரக்கூடாது என்று
வரிந்துகெட்டும் வக்கிர கும்பலை உனக்கு தெரியும் !
மும்பை ..க.ஆறுமுகப்பாண்டியன்..................


திராவிட முன்னேற்ற கழகத்தில் ஏன் சேர வேண்டும் !
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இளைஞர் சமுதாயமே!
தமிழ் நாட்டில் பிராமணர் அல்லாத சமுதாயம் எல்லாம் தங்களுக்கு ஒரு அரசியலமைப்பை உருவாக்கி , நம்முடைய சமுதாயத்திற்காக
அல்லது நம் சாதிவளர்ச்சிக்காக என கூறி கட்சி ஆரம்பித்து
அந்தந்த சாதியில் உள்ள இளைஞர்களை வெறியேற்றி
அந்த சாதியை விட நாம் குறைந்தவனா?
அவருக்கு நிகராக நாம் ஏன் போராடக்கூடாது
நமக்கென்று ஒரு அரசியலமைப்பு வேண்டும் என்று முளைச்சலவை செய்து
கட்சி ஆரம்பித்து அதன் கட்சி தலைவர்கள் இன்று சொகுசு வாழ்கை வாழ்வதை நாம் பார்க்கிறோம் இளைஞனே இவர்களால் உன் சாதிக்கு பெருமை உண்டா ? சற்று சிந்தித்து பார் உன்சாதி கட்சி
வளர்ந்திருக்கிறதா ? உன் சாதி தலைவன் வளர்ந்திருக்கிறானா ? என்றாவது ஒரு சீட்அல்லது இரண்டு சீட் தவிர உன்சாதி தலைவனால் சீட் எந்த கட்சியிலாவது வாங்கமுடியுதா? அந்த ஒரு சீட்டையும் உன்சாதியில் கடைக்கோடியில் இருக்கும் ஒருவனுக்கு வழங்கப்பட்டதா ? யோசி இளைஞனே! கட்சி ஆரம்பித்தவனே அந்த சீட்டையும் வைத்துக்கொள்கிறான்
பிறகு எப்படி உன் சாதி வளர்ச்சிக்கு பாடுபடுவான் ! பிறகு எப்படி உன் சாதி கட்சி வளரும் தந்தை பெரியார் அவர்கள் சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கிறதா ! ஒரு போதும் ”தனி கிணறு வெட்டாதே பொது கிணற்றில் எல்லோரும் சேர்ந்து தண்ணிர் எடுப்போம் அதுதான் உன் சமுதாய இழிவை போக்கும் ”இதன் அர்த்தம் உனக்கென்று ஒன்றை உருவாக்கி நீ தனிமைப்பட்டு போகாதே எல்லோரோடும் சேர்ந்து வாழ் அதுவே சாதி வேற்றுமைகளை களையும் ஆயுதம் ! ஆனால் இன்று என்ன நடக்கிறது தங்கள் சுய நலத்துக்காக , கட்சி ஆரம்பிக்கிறார்கள்
உங்கள் சாதி தலைவர்களின் வரலாற்றைப்பாருங்கள்
இதற்க்கு முன் அவர்கள் எந்த கட்சியில் இருந்தார்கள்
ஏன் அந்த கட்சியை விட்டு விலகினார்கள்
ஏன் நம்முடைய சாதிக்காக கட்சி ஆரம்பித்தார்கள்
அந்த கட்சியில் போதிய மரியாதை இல்லை
அந்த கட்சியில் மந்திரி பதவி கிடைக்கவில்லை
அடுத்து அந்த கட்சியில் சீட் கிடைக்காது
இதுபோன்ற காரணங்களால் மட்டுமே அவர்கள் பிரிந்து சாதி இளைஞர்களை உசுப்பேத்தி கட்சி ஆரம்பித்து அவர்கள் தலைவராகி சொகுசு வாழ்கை வாழ்கிறார்கள் இளைஞனே நீ அவர்களுக்காக கூட்டம் சேர்ப்பதும் அவர்களுக்கு நிதி வழங்குவதுவும்
உன் வாழ்க்கை முன்பை விட குருகிய வட்டத்துக்குத்தான் வந்து சேர்ந்துள்ளது நீ சாதி கட்சி ஆரம்பித்ததால் சாதிய வட்டத்தில் இருந்து வெளியே வந்து இருக்கிறாயா ? இல்லையே !
உன்சாதி கட்சி வளர்ந்திருக்கிறதா !
கட்சி வளரவில்லையே என் உன் தலைவன் என்றாவது வருத்தப்பட்டதுண்டா? மாறாக
இந்த கட்சி இல்லை என்றால் அந்தகட்சி என்று கொள்கைமாறி அவனுக்கு சீட் வங்குவதிலே குறியாக இருக்கிறான் இதுதான் உண்மை
இப்படிபட்ட சாதி தலைவவர்களால் சாதிக்கு பெருமையில்லை!
அப்படியானால் இதற்கு தீர்வுதான் என்ன ? கேட்பது புரிகிறது
திராவிட இயக்க வரலாறுகளைப்படி உனக்கு புரியும்
தாழ்த்தப்பட்ட
பிற்படுத்தப்பட்ட
மிகவும்பிற்படுத்தப்பட்ட
மற்றும் ஒடுக்கப்பட்ட
இளஞர்கள் திராவிட இயக்க வரலாரை படித்து பார்த்தால்
சாதி கட்சிக்கு அடிமையாக மாட்டிர்கள்
பிராமணர் அல்லாத சமுதாயத்திற்காகவே ஆரம்பிக்கப்பட்ட அமைப்புதான்
திராவிடமுன்னேற்றகழகத்தின் தாய் அமைப்பான நீதி கட்சி
காலத்திற்கேற்ப மாறி இன்று திராவிடமுன்னேற்றகழகமாக
நம் முன் ஆலமரமாக நிழல் தந்துகொண்டிருக்கிறது
இந்த ஆலமர நிழலில் தங்கியவர்கள் தான் சிலர் தங்கள் சாதிக்கென தலைவராகி கட்சிஆரம்பித்து இளைஞர்களை வசியப்படுத்தி
அவர்கள் வாழ்கிறார்கள் அவகள் சாதியை பின்னோக்கி தள்ளுகிறார்கள்
இதற்கு தீர்வு ஒன்றுதான் சாதிகட்சிக்கு அடிமையாகாதே !
தாழ்த்தப்பட்ட
பிற்படுத்தப்பட்ட
மிகவும்பிற்படுத்தப்பட்ட
மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய திராவிடமுன்னேற்றகழகத்தில் இனைந்து பணியாற்று
அது உனக்கான உரிமை பெற்று தரும்
உலக வரலாற்றில் எந்த கட்சியாவது மாவடசெயலாளர் பொருப்புக்கு
ஒரு தாழ்த்தபடசமுதாயத்தை சேர்தவரை கட்டாயமாக தேர்ந்தேடுத்திருக்கிறதா !(ஒரு மாவட்டத்துகு ஒரு தாழ்த்தபட்டவர் )
திராவிடமுன்னேற்றகழகம் அதை செய்துள்ளது
இடஒதீக்கிட்டுக்காக தமிழ்நாட்டில் போராடி வெற்றி பெற்ற கட்சி திராவிடமுன்னேற்றகழகம்!
மந்திரி சபையில் எல்லா சமுதாயத்திற்கும் சரியாக ,சமமாக
பங்கீட்டு கொண்ட கட்சி திராவிடமுன்னேற்றகழகம்
ஒட்டு மொத்த சமுதாய வளர்ச்சிக்காக போராடும்
திராவிடமுன்னேற்றகழகத்தில் இன்றய இளைஞர்கள்
சேர்ந்து சாதி பாகுபாடற்ற சமுதாயத்தை
உருவாக்க வேண்டும் அதுவே சமுகத்தில்
சாதி வேற்றுமைகளை களைய எடுக்கும்
நல்ல நடவடிக்கையாக அமையும்
சாதி கட்சிகளை வெறுப்போம் !!
திராவிடமுன்னேற்றகழகத்தில் சேர்வோம் வெற்றி பெறுவோம் !!
மும்பை க.ஆறுமுகப்பாண்டியன்