இந்த பதிவை உங்களால்
படிக்க முடியுமா?
படித்தால் மட்டும்
லைக் செய்யவும்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நடு நிலை வாக்காளரும்
நானும் !
>>>>>>>>>>>>>>>>
ஒரு வாக்காளரிடம்
யாருக்கு ஒட்டு போடுவிங்கன்னு கேட்டேன்
அவர் சொன்னார்
அதை இன்னும் முடிவு பன்னவில்லை என்றார்
ஏன் பண்ணவில்லை
.. அது வந்து இழுத்தார்
உங்கள் வீட்டில் இரண்டுலட்சம் ரூபாய் விவசாய கடன்
இருந்ததே கட்டி முடிச்சிங்களா ?நான் கேட்டேன்
நான் எங்க கட்டினேன் கலைஞர் தான் தள்ளுபடி செய்து எங்க மானத்தை காப்பாதினார்
அப்ப அவருக்கு ஒட்டு போடலாமே !
போடலாம் ஆனாலும்
……… இழுத்தார்
சரி அதை விடுங்க உங்க வீட்டில் டிவி இல்லாம இருந்ததே டிவி வாங்கியாச்சா
? அப்பாவியாக நான் கேட்டேன்
நான் எங்க வாங்கிறது
கலைஞர்தான் இலவச டிவியும் தந்தாரு
எனக்கு ஒன்னு எங்க
அம்மாவுக்கு ஒன்னு என் தம்பிக்கு ஒன்னு மொத்தம்
எங்க குடும்பத்தில் ஒன்பது இலவச டிவி வாங்கீருக்கோம்
கலைஞர் புன்னியத்தில் வெகுளியாக பதில் சொன்னார்
அப்படியின்னா இலவச
டிவி தந்த கலைஞருக்கு ஒட்டு போடலாமே நானும்
வெகுளியாகக்கேட்டேன்
போடலாம் ………………………………ஆனாலும்
மீண்டும் இழுத்தார்
சரி விடுங்க உங்க
விட்டில் அடுப்பங்கரையில் விறகையே கானோம்
நான் கேட்டேன்
அய்யோ உங்களுக்கு
தெரியாதா ? கலைஞர் எங்களுக்கு இலவசமாக கேஸ் அடுப்பு
தந்திருக்காரே , நாங்க ஏன் விறகு அடுப்பை தேடனும்
அவர் சிரித்து
சொன்னார்
நான் வெறுத்துக்கேட்டேன் அப்படின்னா கலைஞருக்கு ஒட்டுபோடலாமே !
போடலாம்
ஆனாலும் இன்னும் இழுத்தார் அவர்
சரி உங்க மகள்
கல்யாணத்தை முடிக்க சிரமப்பட்டிங்களே எப்படி நடந்தது
நான் தெரியாதது
மாதிரி கேட்டேன்
ஓ அதுவா கலைஞரின் முவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் திருமண
உதவி திட்டத்தின் முலம் 25 ஆயிரம் ரூபாய் கிடைத்தது அதை வைத்து சமாளித்தேன்
பெருமை பட்டுக்கொண்டார்
அப்படியின்னா அதுக்காகவாது கலைஞருக்கு ஒட்டு போடலாமே ஏக்கத்தோடு நான் கேட்டேன்
போடலாம் ஆனாலும் மேலும் இழுத்தார்
உங்களுக்கு பேத்தி பிறந்திருக்குதாமே மகிழ்சியாக
நான் கேட்டேன்
ஆமா ஆமா மாகாலட்சுமி மாதிரி பெண் பிள்ளை பிறந்திருக்கு
கலைஞரின் மகபேறு
உதவி திட்டதினால் ஒரு பைசா செலவில்லாமல்
தாயும் சேயும்
நலம் துள்ளி குதித்தார்
அதே மகிழ்ச்சியில்
நான் கேட்டேன் அப்படியின்னா கலைஞருக்கு ஒட்டு போடலாமே
மீண்டும் அதே பல்லவி
போடலாம் … ஆனாலும்
விடுங்க சார்!
உங்களுக்கும் உங்க் தம்பிக்கும் வயதான அம்மாவுக்கு
யார் சோறு போடனுமின்னு சண்டை வந்ததே முடிஞ்சிருச்சா நான் கேட்டேன் !
அதைஏன் கேட்கிறீங்க
கலைஞரின் முதியோர் ஒய்வுதிய திட்டத்தின் முலம்
அந்த சண்டைமுடிந்தது இப்ப எங்க அம்மா
சந்தோசமாக இருக்காங்க கலைஞர் கொடுத்த பணத்தில் சாப்பிடுறாங்க இப்ப் எங்களுக்கு எங்க
அம்மா தொந்தரவு இல்லை நிம்மதி பெருமுச்சு விட்டார்
இந்த சமயத்திலாவது ஒட்டுகேட்கலாமே என்று இனி கலைஞருக்குத்தானே
ஒட்டு போடுவிங்க
போடலாம் ஆனாலும்
மேலும் இழுத்தார்
எரிச்சலுடன் எனங்க பிறப்புமுதல் இறப்பு வரை கலைஞர்
திட்டத்தால் வாழ்தேன்னு சொல்லுறீங்க இன்னும்
கலைஞர் திட்டம் எதுவெல்லாம் கிடைத்திருக்குது கேட்டேன்
பெருமையாக சொன்னார் அவர்
என் குழந்தைகள்
பள்ளி கூடம் செல்ல இலவச சைக்கிள்
பஸ்ஸில் சென்றால்
இலவச பஸ் பாஸ்
பட்டதாரி இல்லாத
குடும்பத்தில் இருந்து படிக்கும் குழந்தக்கு அது படிக்கும் வரை இலவச கல்வி
ஒரு ரூபாய்கு அரிசி தந்தாரு
ஏன் கலைஞரின் காங்கீரிட்
வீடு திட்டத்தில் எனக்கு வீடு கூட கிடைத்திருக்குதே பெருமையாக சொன்னார்
இதுதான் சமயம்
என்று அப்படின்னா கலைஞருக்கு ஒட்டு போடலாமே
!
நான் கேட்க
அவர் தலையை சொறிந்து விட்டு போடலாம் ஆனாலும் என்றாரே!
நான் கோவத்தோடு
இத்தனையும் அனுபவித்துவிட்டு ஆனாலு ஆனாலு என்று இழுக்கிறீங்களே அது என்ன ஆனாலும் நான் சீறினேன்
அது ஒன்னுமில்லைங்க ஒட்டு போடுற நேரத்தில் ஒரு ஒட்டுக்கு அயிரம் இரண்டாயிரமின்னு தாராங்க ! பணம் தரும்போது வாங்கத்தானே வேண்டியதிருக்கு ! கைநீட்டி பனம் வாங்கின பிறகு நம்பிக்கை துரோகம் செய்யகூடாதல்லவா 1 அதுதான் யோசிக்க
வேண்டியதிருக்கு என்றார் அவர்
ஒரு நாள் கிடைக்கிற ஆயிரத்துக்கும் இரண்டாயிரத்துக்கும்
நம்பிக்கையைப்பற்றி பேசுறியே பிறப்பு முதல் இறப்பு வரை கலைஞரின் திட்டத்தால் வாழ்ந்து
வரும் நீ நம்பிக்கைப்பற்றி பேசுறீயே உனக்கெல்லாம் வெட்கமாக இல்லை ! நீயெல்லம் மனுசனா?
நன்றிகெட்டவனேன்னு இனிய இரவு வணக்கம்
கேட்ககனுமின்னு
நினைச்சேன் ஆனால் கலைஞரின்
மறப்பது மக்களின்
இயல்பு !
நினைவுபடுத்துவது
கழக தொண்டனின் கடமை !
என்ற பொன்மொழி
நினைவுக்கு வந்ததால்
பொதுஜனத்தை குற்றம்
சொல்லாமல்
கலைஞரின் இன்னும் பல அரிய திட்டங்களை எடுத்துசொல்லி
வரும் தேர்தலிலாவது குழப்பமில்லாமல் கலைஞருக்கு ஒட்டு போடுங்கள் என்று பணிவுடன் ஒட்டுகேட்டு பெருமுச்சு விட்டேன் !!
......................மும்பை ஆறுமுகப்பாண்டியன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக