வெள்ளி, 10 ஜூலை, 2015

கழகத்துக்காக ....2

இளைஞர் சமுதாயமே ! 
கலைஞரைப்பற்றி தெரிந்துகொள் !
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கலியுக இயேசு பிரான் எங்கள் கலைஞர் 
……………….( மண்ணிப்பதில் )……………………………..
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இந்த அடைமொழி சரிதானா ? 
பகுத்தறிவு பாதையில் செல்லும் ஒரு தலைவருக்கு கலியுக இயேசு பிரான்
என்ற அடை மொழியைத்தருவதா ? அது ஏற்புடையதல்லவே !
இந்த அடைமொழியை நான் உச்சரிக்க காரணத்தை கிழே பதிவு செய்துள்ளேன் இந்த அடைமொழியை என் தலைவர் கலைஞர் விரும்பமாட்டார் என்பதும் உண்மை 
வரலாற்றை திரும்பிப்பார்க்கிறேன் சில சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன கவியரசு கண்ணதாசனை உங்களுக்கு தெரியும் 
கலைஞரை என் காதலி என்று வர்ணித்தவர் பிற்காலத்தில் தனக்கு அரசியலில் இடமில்லாமல் போகவே , கலைஞரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சணம் செய்து வயிறு வளர்த்தவர் அதாவது கலைஞரை கீழ்தரமாக 
எழுதி அதன்முலம் வரும் பணத்தில் வாழ்ந்தவர் இதே கண்ணதாசன் அண்ணாவையும் விட்டு வைக்கவில்லை பணத்துக்காக தன் ரகசியத்தையும் விற்றவர்தான் இந்த கண்ணதாசன் .. ஆக ஏட்டில் கலைஞரை தரக்குறைவாக எழுதியதால் இன்று அந்த எடுகளை படிப்பவர்கள் கலைஞர் இவ்வளவு மோசமானவரா என்று சிந்திக்க வேண்டியது வரும், எனென்றால் ஏட்டில் எழுதியதை அழிக்கமுடியாது அப்படி அழிக்கமுடியாத கறையை எற்படுத்திய கண்ணதசனை பிற்காலத்தில் பழிதீர்த்தாரா என்றால் இல்லையென்றே வரலாறு சொல்கிறது காலை வாரி விட்டன்னையே வாரிஅனைத்து 
உச்சிமுகந்து பதவி கொடுத்து அழகு பார்த்தவர்தானே கலைஞர் 
அது மட்டுமல்ல எத்தனைமுறை தோல்வியதந்தாலும் 
தமிழினமே தமிழினமே என்ன கடலிலே தூக்கி போட்டாலும் 
உனக்காக மரக்கலணாக மிதப்பேன் என்று சொன்னவர்தானே கலைஞர்
கண்ணதாசன் இறந்தபோது அவருக்காக கண்ணிர் விட்டு 
எழுதிய கவிதையை படித்து பாருங்கள் கலைஞரின் அருமை தெரியும் 
எண்ணம் தானே எழுத்து 
உள்ளத்தில் இருப்பதுதானே பேச்சாக வெளியில் வரும்
வரலாற்றில் மறைக்கமுடியாத கறையை ஏற்படுத்திய 
கண்ணதாசனுக்கு வரலாறு மறக்க முடியாத 
கலஞர் எழுதிய கவிதாஞ்சலியை படித்து பாருங்கள் 
என் இனிய நண்பா
இளவேனிற் கவிதைகளால்
இதய சுகம் தந்தவனே! உன்
இதயத்துடிப்பை ஏன் நிறுத்திக் கொண்டாய்!
தென்றலாக வீசியவன் நீ - என்நெஞ்சில்
தீயாகச் சுட்டவனும் நீ! அப்போதும்
அன்றிலாக நம் நட்பு நிகழ்ந்ததேயன்றி
அணைந்த தீபமாக ஆனதே இல்லை; நண்பா!
கண்ணதாசா! என்
எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா!
கவிதை மலர்த் தோட்டம் நீ - உன்னைக்
காலமெனும் பூகம்பம் தகர்த்துத்
தரைமட்டம் ஆக்கிவிட்டதே!
கைநீட்டிக் கொஞ்சுவோர் பக்கமெல்லாம்
கரம் நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ!
கல்லறைப் பெண்ணின் மடியிலும்
அப்படித்தான் தாவி விட்டாயோ
அமைதிப்பால் அருந்தித் தூங்கி விட!
இயக்க இசைபாடிக்களித்த குயில் உன்னை
மயக்க மருந்திட்டுப் பிரித்தார் முன்னை
தாக்குதல் கணை எத்தனைதான் நீ
தொடுத்தாலும்
தாங்கிக் கொண்ட என்நெஞ்சே உன் அன்னை!
திட்டுவதும் தமிழில் நீ திட்டியதால் - சுவைப்பிட்டு என ஏற்றுக் கொண்ட என்னை;
தித்திக்கும் கவித்தமிழா! பிரிவின்
மத்தியிலே ஏன் விட்டுச் சென்றாய் ?
அடடா! இந்த இளமைக் கழனியில்
அன்பெனும் நாற்று நட்டோம்!
ஆயிரங்காலத்துப் பயிர் நம் தோழமையென ஆயிரங்கோடி கனவு கண்டோம்!
அறுவடைக்கு யாரோ வந்தார்!
உன்னை மட்டும் அறுத்துச் சென்றார்
நிலையில்லா மனம் உனக்கு! ஆனால்
நிலைபெற்ற புகழ் உனக்கு!
இந்த அதிசயத்தை விளைவிக்க உன்பால்
இனியதமிழ் அன்னை துணை நின்றாள்!
என் நண்பா!
இனிய தோழா!
எத்தனையோ தாலாட்டுப்பாடிய உன்னை
இயற்கைத் தாய் தாலாட்டித் தூங்க வைத்தாள்!
எத்தனையோ பாராட்டுப் பெற்ற உனக்கு
இயற்கைத்தாயின் சீராட்டுத்தான் இனிக்கிறதா?
எனை மறந்தாய்! எமை மறந்தாய்! உனை
மறக்க முடியாமல் உள்ளமெல்லாம் நிறைந்தாய்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இளைஞர் சமுதாயமே ! ஒரே நேரத்தில் பல பேர்களைப்பற்றி
எழுதினால் நீ படிக்கமாட்டாய் என்பது எனக்கு தெரியும் ! ஆகவே அடுத்த பதிவில் பார்ப்போம் !
மும்பை ஆறுமுகப்பாண்டியன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக