கவிதை எழுத ஆசைப் பட்டேன் !
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.
நீல வானத்தை பற்றி எழுதலாமா ?
கரும்புகையாகிப் போனேனே !
கலங்கியது வானம் !
மழையை கேட்டேன் !
உன்னைப் பற்றி எழுதவா?
மரம் இருந்தால் தானே பொழிவேன் !
மருண்டது மழை !
மரத்தை கேட்டேன் !
உன்னை எழுதவா?
கெலிகாப்டர் இறங்குவதற்கு
என்னைத்தானே பழிவாங்குகிறார்கள்!
பதறியது மரம் !
சரி பச்சை பசேலென வயல் வெளிகளை எழுதலாமே !
எல்லாம் வீட்டு மனைகளாகி போய்விடனவே
என்றது ஆங்கொர் குரல் !
சேலை கட்டிய பென்களின் அழகைப்
பற்றியாவது எழுதலாமா யோசித்தேன்
சுடிதாரும் ஜின்ஸ்சும் லெக்கிஸ்சும் டி+சர்டுமாய் மாய் !
என் கற்பனை வேறுவிதமாய் !
மனைவியை பற்றி
எழுதி விடுவோம் முடிவெடுத்தேன்!
அய்யகோ
அவள் என்வீட்டு எஜமானியாகி போனாள் !
மழலைக் குழந்தயை எழுதுவோமா ?
பிறக்கும் போதே குழந்தைக்குள்
உலகத்தை திணித்து விட்டோமே !
எப்படி கொஞ்சும் மொழி பேசுவான்
நண்பனைப் பற்றி எழுதினால் என்ன ?
ஆயிரம் ருபாய் அவன்
கேட்டு நான் தராததால்
நானே அவனுக்கு முதல் எதிரியானேன் !
இறுதியாக மனித நேயத்தை
எழுதலாம் முடிவெடுத்தேன் !
அது கானாமல் போனதாலே கலங்கி நிற்கிறேன் !
உலகம் கண்ணிர் விட்டது !!!!!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
எப்படி நான் கவிஞனாவேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக