கேள்வி :- கழக ஆட்சியில் தொடங்கப் பட்டது என்பதற்காக கிடப்பில்
போடப்பட்ட தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம் பற்றி உயர்
நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு என்ன ஆயிற்று?
கலைஞர் :- ராதாபுரம் தொகுதியின் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர், அப்பாவு அவர்கள் தான்
இந்த வழக்கினை உயர் நீதிமன்றத்தில் தொடுத் திருந்தார். தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம் என்பது 2009ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத் தின் மொத்த மதிப்பீடு 369 கோடி ரூபாய். 2009இல் 65 கோடி ரூபாயும், 2010இல் 41 கோடி ரூபாயும், 2011இல் 107 கோடி ரூபாயும் இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டு, இந்தத் திட்டத்தின் இரண்டு கட்டப் பணிகள்
முடிவடைந்தன.
கலைஞர் :- ராதாபுரம் தொகுதியின் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர், அப்பாவு அவர்கள் தான்
இந்த வழக்கினை உயர் நீதிமன்றத்தில் தொடுத் திருந்தார். தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம் என்பது 2009ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத் தின் மொத்த மதிப்பீடு 369 கோடி ரூபாய். 2009இல் 65 கோடி ரூபாயும், 2010இல் 41 கோடி ரூபாயும், 2011இல் 107 கோடி ரூபாயும் இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டு, இந்தத் திட்டத்தின் இரண்டு கட்டப் பணிகள்
முடிவடைந்தன.
அதன்படி தாமிரபரணி ஆற்றிலிருந்து மூலக்கரைப் பட்டி வரை கால்வாய் வெட்டும்
பணி முடிவடைந்தது. மூன்று மற்றும் நான்காம் கட்டப் பணிகளுக்காக தமிழகப்
பட்ஜெட்டில் 2012-13ஆம் ஆண்டில் 100 கோடி ரூபாயும், 2013-2014ஆம் ஆண்டில்
119 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும், அந்தப் பணிகள்
மேம்படுத்தப்படாமல், அப்படியே கிடப்பில் போடப்பட்டன. இந்த 219 கோடி
ரூபாயில் 25 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது. மீதமுள்ள தொகையை பொதுப்
பணித்துறை அரசுக்குத் திரும்ப அனுப்பிவிட்டது. தாமிரபரணி ஆற்றிலிருந்து
வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை வறண்ட பகுதிக்குத் திருப்பி விடும் இந்தத்
திட்டத்தை செயல் படுத்த வேண்டுமென்றுதான் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்
செய்த வழக்கில் அப்பாவு கேட்டுக் கொண்டார். இந்த வழக்கு தலைமை நீதிபதி
சஞ்சய் கிசன் கவுல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதல்
அமர்வின் முன் விசாரணைக்கு வந்த போது, நீதியரசர்கள் இந்தத் திட்டத்தின்
மூன்றாம் கட்டப் பணிகள் எதற்காக நிறுத்தப்பட்டன என்றும், பணியை எப்போது
தொடங்குவீர்கள் என்றும், எவ்வளவு காலத்திற்குள் முடிப்பீர்கள் என்றும்,
இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப் பட்ட நிதியை ஏன் திரும்ப அரசுக்கு
அனுப்பினீர்கள் என்றும், இத்திட்டம் 6 கிடப்பில் போடப்பட்டதால் ஏற்படும்
கூடுதல் செலவினங்களுக்கு யார் பொறுப் பேற்பது என்றும், இதற்கு மூன்று
வாரங்க ளுக்குள் பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்றும்
உத்தரவிட்டிருக்கிறார்கள்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கேள்வி :- ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ஒருவர் சென்னையில் தனது வீட்டு வாசலில் அன்றாடம் ஒரு திருக்குறளை, நீங்கள் எழுதிய உரையுடன் எழுதி வைப்பதாக செய்தி வந்துள்ளதே?
கலைஞர் :- பாராட்டப்பட வேண்டிய - தமிழர்கள் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய செய்தி. நான்
ஆட்சிப் பொறுப்பிலே போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போதுதான், பேருந்துகளிலும், அரசினர் தங்கும் விடுதிகளிலும் திருக்குறளை எழுதி வைக்க ஆணை பிறப்பித்தேன். வள்ளுவர்கோட் டத்தை எழுப்பினேன். குமரியில் வள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை வடித்தேன். குறளோவியம் எழுதினேன்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கேள்வி :- ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ஒருவர் சென்னையில் தனது வீட்டு வாசலில் அன்றாடம் ஒரு திருக்குறளை, நீங்கள் எழுதிய உரையுடன் எழுதி வைப்பதாக செய்தி வந்துள்ளதே?
கலைஞர் :- பாராட்டப்பட வேண்டிய - தமிழர்கள் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய செய்தி. நான்
ஆட்சிப் பொறுப்பிலே போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போதுதான், பேருந்துகளிலும், அரசினர் தங்கும் விடுதிகளிலும் திருக்குறளை எழுதி வைக்க ஆணை பிறப்பித்தேன். வள்ளுவர்கோட் டத்தை எழுப்பினேன். குமரியில் வள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை வடித்தேன். குறளோவியம் எழுதினேன்.
குறளுக்கு உரை எழுதினேன். அந்த வகையில் தற்போது ஓய்வு பெற்ற காவல்
ஆய்வாளர் ஒருவர் தன் வீட்டு வாசலில் அன்றாடம் ஒரு குறளையும், அதற்கு நான்
எழுதிய உரையையும் எழுதி வைக்கின்ற செய்தி மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கேள்வி :- தமிழகத்தில் நடைபெறும் சில வார, நாளேடுகள் அப்பட்டமாக தி.மு.கழகத் தைப்
பற்றிய உண்மைக்கு மாறான செய்தி களையே தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்களே?
கலைஞர் :- அப்படியெல்லாம் செய்தால்தான் அவர்களுடைய பிழைப்பு நடைபெறும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. “பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே” என்ற பாடல்தான் அந்தச் செய்திகளைப் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது. அப்படிப்பட்ட செய்திகளை வெளியிட நாம் ஏன் இடம் கொடுக்க வேண்டும்? இப்படிப் பட்ட உண்மைக்கு மாறான செய்திகளை வெளி யிட்டால்தான் தங்கள் பத்திரிகைக்கு அரசு விளம்பரம் கிடைக்கும் என்ற அளவுக்கு அந்தப் பத்திரிகையாளர்கள் ஆளாகியிருக்கிறார்கள்! இப்படித்தான் பிழைக்க வேண்டும் என்பது ஒரு ரகம்; எப்படியும் பிழைக்கலாம் என்பது இன்னொரு ரகம்! அந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான் இவர்கள்! உதாரணத்திற்கு “தினமலர்” நாளேடு வெளியிட்ட இரண்டு செய்திகளைக் கூறுகிறேன். “நடிகர் விஷாலுக்கு வலை, கருணாநிதி விருப்பம் நிறைவேறுமா?” என்ற தலைப்பில் ஒரு செய்தி. நடிகர் சங்கப் பொதுக் குழு கூட்டத்தில் அவர் பேசியதையொட்டி, அவரை கழகத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்று நான் கூறினேனாம்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கேள்வி :- தமிழகத்தில் நடைபெறும் சில வார, நாளேடுகள் அப்பட்டமாக தி.மு.கழகத் தைப்
பற்றிய உண்மைக்கு மாறான செய்தி களையே தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்களே?
கலைஞர் :- அப்படியெல்லாம் செய்தால்தான் அவர்களுடைய பிழைப்பு நடைபெறும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. “பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே” என்ற பாடல்தான் அந்தச் செய்திகளைப் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது. அப்படிப்பட்ட செய்திகளை வெளியிட நாம் ஏன் இடம் கொடுக்க வேண்டும்? இப்படிப் பட்ட உண்மைக்கு மாறான செய்திகளை வெளி யிட்டால்தான் தங்கள் பத்திரிகைக்கு அரசு விளம்பரம் கிடைக்கும் என்ற அளவுக்கு அந்தப் பத்திரிகையாளர்கள் ஆளாகியிருக்கிறார்கள்! இப்படித்தான் பிழைக்க வேண்டும் என்பது ஒரு ரகம்; எப்படியும் பிழைக்கலாம் என்பது இன்னொரு ரகம்! அந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான் இவர்கள்! உதாரணத்திற்கு “தினமலர்” நாளேடு வெளியிட்ட இரண்டு செய்திகளைக் கூறுகிறேன். “நடிகர் விஷாலுக்கு வலை, கருணாநிதி விருப்பம் நிறைவேறுமா?” என்ற தலைப்பில் ஒரு செய்தி. நடிகர் சங்கப் பொதுக் குழு கூட்டத்தில் அவர் பேசியதையொட்டி, அவரை கழகத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்று நான் கூறினேனாம்
இது முழுக்க முழுக்க பொய்ச் செய்தி. அதுபோலவே திருமண நாளையொட்டி என்னிடம்
ஆசி பெற என் மகன் ஸ்டாலினும், மருமகளும் கோபாலபுரம் வந்தார்கள்; வந்தவுடன்
நேரே வந்து என்னிடம் ஆசி பெற்றுச் சென்றார்கள். அதைப்பற்றி என்னைச்
சந்திக்க அவர்கள் விரும்பியபோது நான் மறுத்து விட்டதாக ஒரு பொய்ச் செய்தியை
அந்த நாளேடு வெளியிட்டிருக்கிறது.
நான் அவர்களைச் சந்திக் கவோ, ஆசி கூறவோ மறுத்து விட்டதாக அந்த நாளேடு நிரூபிக்க முடியுமா? அந்தப் பத்திரிகை யின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்குத் தெரிந்துதான் இப்படியெல்லாம் வெளியிடுகிறார்களா? அல்லது அவருடைய பார்வையில் அந்த நாளேடு தற்போது நடைபெறவில்லையா? உதாரணத் திற்கு 2 செய்திகளை மட்டும் கூறினேன். ஒவ்வொரு நாளும் அந்த நாளேடு கழகத்தைப் பற்றி இப்படி இட்டுக்கட்டி செய்திகளை வெளியிடுவதையே அண் மைக்கால வழக்கமாக கடைப்பிடித்து வருகிறது. நல்ல அளவிலே நடைபெறும் அந்த நாளேட்டுக்கு ஏன் இப்படிப்பட்ட ஒரு பிழைப்பு?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
திமுக தலைவர் கலைஞர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாள ர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
செய்தியாளர் :- பெங்களூரில் நடைபெறும் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் செப்டம்பர் 20ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருக்கிறபோது, உங்களுடைய மனநிலை எப்படி இருக்கிறது?
தலைவர் கலைஞர் :- என்னுடைய மனநிலை எப்போதும் போலத்தான் இருக்கிறது.
நான் அவர்களைச் சந்திக் கவோ, ஆசி கூறவோ மறுத்து விட்டதாக அந்த நாளேடு நிரூபிக்க முடியுமா? அந்தப் பத்திரிகை யின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்குத் தெரிந்துதான் இப்படியெல்லாம் வெளியிடுகிறார்களா? அல்லது அவருடைய பார்வையில் அந்த நாளேடு தற்போது நடைபெறவில்லையா? உதாரணத் திற்கு 2 செய்திகளை மட்டும் கூறினேன். ஒவ்வொரு நாளும் அந்த நாளேடு கழகத்தைப் பற்றி இப்படி இட்டுக்கட்டி செய்திகளை வெளியிடுவதையே அண் மைக்கால வழக்கமாக கடைப்பிடித்து வருகிறது. நல்ல அளவிலே நடைபெறும் அந்த நாளேட்டுக்கு ஏன் இப்படிப்பட்ட ஒரு பிழைப்பு?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
திமுக தலைவர் கலைஞர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாள ர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
செய்தியாளர் :- பெங்களூரில் நடைபெறும் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் செப்டம்பர் 20ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருக்கிறபோது, உங்களுடைய மனநிலை எப்படி இருக்கிறது?
தலைவர் கலைஞர் :- என்னுடைய மனநிலை எப்போதும் போலத்தான் இருக்கிறது.
செய்தியாளர் :- வர இருக்கிற தீர்ப்பு, தமிழக அரசியலில் எப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?
கலைஞர் :- என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ இல்லையோ; மன மாற்றத்தை ஏற்படுத்தும்.
செய்தியாளர் :- தீர்ப்புக்கான தேதியை நீதிபதி அறிவித்துள்ள இதே நாளில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை, மத்திய சட்ட அமைச்சர் சந்தித்துப் பேசியிருக்கிறாரே? இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
கலைஞர் :- இதற்காக மத்திய அரசை குறை கூறுவது முறையுமல்ல; நியாயமுமல்ல! மோடி தலைமையிலே பணியாற்றுகின்ற சட்ட அமைச்சர் எந்தவிதமான இழுக்கும் மத்திய அரசுக்கு ஏற்படாமல் நடந்து கொள்வார் என்று நான் நம்புகிறேன்.
கலைஞர் :- என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ இல்லையோ; மன மாற்றத்தை ஏற்படுத்தும்.
செய்தியாளர் :- தீர்ப்புக்கான தேதியை நீதிபதி அறிவித்துள்ள இதே நாளில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை, மத்திய சட்ட அமைச்சர் சந்தித்துப் பேசியிருக்கிறாரே? இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
கலைஞர் :- இதற்காக மத்திய அரசை குறை கூறுவது முறையுமல்ல; நியாயமுமல்ல! மோடி தலைமையிலே பணியாற்றுகின்ற சட்ட அமைச்சர் எந்தவிதமான இழுக்கும் மத்திய அரசுக்கு ஏற்படாமல் நடந்து கொள்வார் என்று நான் நம்புகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக